Posts

Showing posts from April, 2022

இனி தினமும் அந்தாதிதான்

Image
 உன்னோடு பயணித்த ஒவ்வொரு மணித்துளியும் மரித்தாலும் மறவாது கண்மணியே!  நித்திரையிலும் நினைத்ததில்லை நின் நினைவு தினம் தினம் வாட்டுமென்று! ஆசைத்தீ என்றால் ஆறு மண்டலத்துக்குள்  அணைந்து இருக்கக்கூடும்..! இலட்சியத்தீ.... மறையாது, மறைக்காது, மரணிக்காது!  என் எச்சத்தின் மிச்சம் இருக்கும் வரை எரிந்து கொண்டே இருக்கும் நரக வேதனைதான்... ஆயினும் பரமசுகம்! கரைகிறேன், உறைகிறேன், பனிக்காடாய் பற்றி எரிகிறேன்...   மானங்கெட்ட மனசு மத்தளம் கொட்டுகிறது! மகுடி ஊதிய பாம்பாய் தறிகெட்டு ஆடுகிறது!  மனமது வசப்பட்டாள் மகான் ஆகிவிடுவேன்! மனமோ! மாதேவி வசம்...   வேறு வழியில்லை சரணாகதி அடைந்து விட்டேன்...  இனி தினமும் அந்தாதி தான்...! 

கல்யாண அகதிகள்

Image
காணும் முகமெல்லாம் கல்யாண அகதிகள்.... கருவறையில் காதல் கனி ரசம். தெவிட்டாத தேன் அமுதாய் தித்திக்கும் காதல் கவிதைகள்...  பருக ஆளில்லை...  பழரசம் இனி இல்லை....  ஆண், பெண் பேதமின்றி சமரசம் உலாவும் இடம் இதுதான்...இங்கு போட்டி இல்லை! பொறாமை இல்லை! வஞ்சகம் இல்லை..! வாழ்த்தும் மனம் மட்டுமே. .. இருமனம்! திருமணம்! மனமெங்கும் மகிழ்ச்சியே! கண்ணோடு கண் பேசும் கரம் நீட்டா...விழி துடைக்கும்! மாதரின் மனக்குமுறல் மன்றாடிக் கிடக்கிறது. இதுவும்  அழகுதான்,  கடலுக்கு அடியில் நிலநடுக்கம்!  சுனாமி வராதவரை!  அணுகுண்டின் கதிர்வீச்சுகள் போதும். இன்னொரு சுனாமி வர வேண்டாம்.... வாழட்டும் இன்முகத்தோடு இவ்வையகமே.. சாத்திர சடங்கில்லை...  சம்பிரதாயம் இனி இல்லை... சகலமும் நான்தான்!  காற்று, நிலம், நீர், ஆகாயம், நெருப்பு என ஐம்பூதமாய் ஆர்பரிக்கின்றேன்...  கண்ணாளனை சேரும் நாள் எந்நாளோ?