Posts

Showing posts from July, 2022

’இரவின் நிழல்’ சில மனிதர்களின் நிழல்களை வெளிச்சம் போட்டு காட்டும்

Image
 பாபம் செய்யாதிரு மனமே! யமன் கோபம் செய்தே நாளை கொண்டோடிப்போவான். - கடுவெளி சித்தர். ‘ஒத்தசெருப்பு’ படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற பெருமை பார்த்திபனை சாரும். ஆம், இயக்குநர் & நடிகர் பார்த்திபன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ‘இரவின் நிழல்’ சிங்கில் ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. படம் எடுக்க அவர் மற்றும் அவரது குழுவினர் பட்ட சிரமங்களை எல்லாம் முதல் அரை மணிநேர கதை கூறுகிறது. சாதிக்கும் எண்ணம் இருந்தால் போதும் இயற்கையை துணை நின்று உதவிசெய்யும் என்பதற்கு இப்படமே ஒரு ஆதாரம். மசாலா திரைப்படங்களை மட்டுமே எடுத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என எண்ணும் இயக்குநர்கள் மத்தியில் ரசிகர்களை நம்பி எந்த ஒரு புதுமுயற்சியாக இருந்தாலும் அதை வரவேற்பார்கள் என்ற அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை (குறிப்பாக தமிழ் ரசிகர்கள்). வறுமை & பசியின் பிடியில் சிக்கி தவிக்கும் யாரும் இல்லாத ஆதரவற்ற சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறான். அதன்பிறகு அவன் வாழ்க்கையில் நடைபெறும் சம்பங்களே இப்படத்தின் கதை. இன்னும் தெளிவாக சொல்ல வ