Posts

Showing posts from January, 2023

எனை மன்னிப்பாயா?

Image
 நானும் ஒரு  சல்லி பயலானேன்.... அன்பின் தேவை ஊற்றெடுக்கும் போது நான் மட்டும் என் செய்வேன்? பணம்! பணம்!! பணம்!!! என்று கொல்லி வாய் பிசாசாய் அலையும் இச்சமூகத்தில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன? இயலாமையின் உச்சம்... என் ஆற்றாமையின் அநீதி...  இப்படித்தான் வாழ வேண்டும் என போதித்த சமூகம்! நான் வளர்ந்த பிறகு, இப்படி எல்லாம் இங்கே வாழ முடியாது என போதிக்கும் போது நான் என்செய்வேன்?  என் ஆதியும் அந்தமும் நீ தான்! தீப்பிழம்பாய் கக்கி விட்டேன் வார்த்தைகளை.... ஆயிரம் மருந்திட்டாலும்  ஆறாத வடுதான்... நான் அன்போடு பேச அழைக்கும் போதெல்லாம் அணுகுண்டின் கதிர்வீச்சாய் பதறுகிறாய்... உன் பதற்றம் என் மனதை கசக்கிப் பிழிகிறது... கண்களில் கண்ணீர் வர மறுக்கிறது... என் பாவக் கணக்கு கூடிக் கொண்டே போகிறது.... அப்பா எனை மன்னிப்பாயா?

முட்டைக் கன்னி

Image
முட்டைக் கண்ணால் முத்தமிடும் முக்கனியே... உன்னை முத்தமிழால் முத்தமிடுகிறேன்...! இது மெய் தீண்டா உயிர் குழந்தையின் முத்தம்..‌.  காற்றசைவில் கவி பாடும் உன் காதோர லோலாக்கிற்கு என் மூச்சுக்காற்றில் முத்தம் இடுகிறேன்... உன் பார்வையில் மின்னல் வெட்ட படர்கிறது பசலை....

இதழ்கள்

Image
 பன்னீரில் துவைத்த ரோஜா இதழ்கள் நிரப்பப்பட்ட தீர்த்த குளத்தில் திக்குமுக்காடுகிறேன்....  வர்ணிக்க முடியாத அழகான டைமண்ட் கண்ணாடி படிக்கட்டுகள் அவளின் உதடுகள்....