Posts

Showing posts from 2024

'அவள்' என்ற பதத்தில் உள்ள சுகம்

Image
 இன்றுதான் இவளின் பிறந்தநாள் ... இவளுக்கு  புலனத்தில் (வாட்ஸ் ஆப் ) வாழ்த்து செய்தி அனுப்பலாம் என்று தோன்றியது ! இருப்பினும் காதலனாக வேண்டாம் , தோழனாக வேண்டாம் , அட இவ்வளவு ஏன் ? சகமனிதராக கூட மதிக்கவோ, நினைக்கவோ மனமில்லாத நங்கைக்கு எவ்வாறு அனுப்புவது ? ஒருவேளை, நாம் அனுப்பும் குறுஞ்செய்தி நமக்கு தென்றல் காற்றாக தோன்றினாலும்  இவளுக்கு வெப்ப அலையாகத்தான் தோன்றும் ! வேண்டாம் என்றது மனது விட்டுவிட்டேன்... பிறகுதான் தெரிந்தது  'அவள்' என்ற பதத்தில் உள்ள சுகம்  "இவள்"  என்ற சொல்லாடலில் இல்லவே இல்லை ! "அவள்" எனக்கானவளாக இல்லாத போதும்  என்னவளாக இருக்கிறாள் !  இவள் - எண்ணிவளாக இருக்கிறாள் (எண்ணிக்கையில் ஒருத்தியாக ) இருப்பினும்,  என் அன்பு தோய்ந்த மனம் இவளையும் வாழ்த்துகிறது !

இரண்டு பொண்டாட்டி

Image
இந்த மனம் ஒரு பொல்லாத  உயிர் தின்னும் பிசாசு.... இதே மனம் உயிரை வளர்க்கும் ஒரு அழகான தேவதை.... ஆம்! இன்று நானே என்னை நினைத்து சிரிக்கின்றேன்...! விடியற்காலை பொழுது திடீரென்று மனவேதனை!  உனக்கு மட்டும் தான் திருமணம் ஆகவில்லை. எத்தனையோ முயற்சி செய்தும் அத்தனையும் தோல்வியிலேயே முடிகிறது.. சரி நம் தலைவிதி என்னவோ அப்படியே நடக்கட்டும்... இதை நான் கடந்து செல்ல முயற்சித்தாலும் மனம் விடுவதே இல்லை! உனக்கான ஒருத்தியை  தேடு தேடு என  என்னை தொல்லை செய்கிறது... நான் தேடி செல்லும் இடமெல்லாம் நிராகரிப்பு மட்டுமே பதிலாக வருகிறது... எங்கிருந்து நான் தேடுவது?  நான் முயற்சிக்கவில்லை என்று நீ சொன்னாலும் பரவாயில்லை! நீ தான் பார்த்துக் கொண்டே இருக்கிறாயே என்று பதில் கேள்வி நான் கேட்க, சற்று மௌனம் காக்கிறது... பிறகு அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கானவள் ஒருத்தி வேண்டும் என்கிறது மீண்டும்! இந்த போராட்டம் உச்சத்துக்கு சென்று மனதை நான் வெறுக்கும்போது இந்த மனமே சிரித்தபடி என்னிடம் சொல்கிறது!   ஹா ஹா ஹா... கவலைப்படாதே உனக்கு ஒரு வேலை இரண்டு மனைவி இருந்தாலும் இருக்கக் கூடும்! அதனால்தான் இவ்வளவு தாமதம் ஆகிறது என்று.. ஒ

என் சோகம் என்னோடு தான்

Image
 என்னுடைய அத்துனை வலிகளையும், துயரங்களையும், வேதனைகளையும் அவள் காலடியில் கொட்டிவிட வேண்டும்! என்னை பற்றி முழுவதும் அறிந்த ஒரு ஜீவன் அவள் ஒருத்தியாக மட்டுமே இருக்க வேண்டும்! என்னை நேசிக்கும், அன்பு செலுத்தும் ஒரு துணைவியாக அவள் இருப்பாள்  என்று நான் எண்ணிய எண்ணங்களை எல்லாம் தவிடு பொடியாக்கினால்..... அந்த ஒற்றை வார்த்தையில் "உன்னை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.  ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறாய்" என்றாள்.  என் வலிகளை எல்லாம் சொல்ல தயங்கிய தருணம் அது.  ஆரம்பிக்கும் முன்பாகவே  நீ எனக்கு வேண்டாம் என்று சொல்லி முடித்து விட்டாள்.     அப்போதுதான் புரிந்தது "வலிகள் நிறைந்ததுதான் தான் வாழ்க்கை! உன் வலிகளை உன்னோடு வைத்து கொள்ள வேண்டும். மாறாக, அதற்கு ஆறுதல் தேட முற்பட்டாலோ, அந்த வலிகளை போக்கிவிட வேண்டும் என நினைத்தாலோ, மிகப்பெரிய வலியை இந்த வாழ்க்கை கொடுத்துவிடும்".என்று  இப்போது என் முதல் 10 வலிகளுக்குள் அவள் முதலிடம் பிடித்துவிட்டாள். ஆம்! அவள் ஏற்படுத்திய வலிதான் இன்றும் என்றும் முதலிடம் வகிக்கும். இதை எழுதி முடிக்கும் முன்பாகவே என் உதட்டோரம் சிறு புன்முறுவல