'அவள்' என்ற பதத்தில் உள்ள சுகம்

 இன்றுதான் இவளின் பிறந்தநாள் ...


இவளுக்கு  புலனத்தில் (வாட்ஸ் ஆப் ) வாழ்த்து செய்தி அனுப்பலாம் என்று தோன்றியது !

இருப்பினும் காதலனாக வேண்டாம் , தோழனாக வேண்டாம் , அட இவ்வளவு ஏன் ?

சகமனிதராக கூட மதிக்கவோ, நினைக்கவோ மனமில்லாத நங்கைக்கு எவ்வாறு அனுப்புவது ?

ஒருவேளை, நாம் அனுப்பும் குறுஞ்செய்தி நமக்கு தென்றல் காற்றாக தோன்றினாலும் 

இவளுக்கு வெப்ப அலையாகத்தான் தோன்றும் ! வேண்டாம் என்றது மனது விட்டுவிட்டேன்...

பிறகுதான் தெரிந்தது 


'அவள்' என்ற பதத்தில் உள்ள சுகம்

 "இவள்"  என்ற சொல்லாடலில் இல்லவே இல்லை !

"அவள்" எனக்கானவளாக இல்லாத போதும் 

என்னவளாக இருக்கிறாள் ! 

இவள் - எண்ணிவளாக இருக்கிறாள் (எண்ணிக்கையில் ஒருத்தியாக )

இருப்பினும்,  என் அன்பு தோய்ந்த மனம் இவளையும் வாழ்த்துகிறது !

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி