உன் புன்னகை போதுமடி!

 

நறுமணம் கமழும் நந்தவனம்,

பன்னீர் இதழ் நனைத்த பரியவள்; தேன்குழல் வெண்ணிலா…

அதியமானின் நெல்லிக்கனியாய் அவள்முகம் என்வசம்,

என் மனமோ அவள் வசம்…

இனி என்ன?... சுயம்வரம்!

இரவெல்லாம் சப்தஸ்வரம்…

அவ்வையின் அருள்வாக்கு ஊக்கமது கைவிடேல்!

என் ஊக்கமும் நீதான்! ஆக்கமும் (மதுவும்) நீதான்!

அருள் ஒளி வீசும் அற்புதமே…

என் ஒவ்வொரு அத்தியாயத்திலும்  அதிமதுரம் வீசுகிறாய்…

என் தவம் செய்தாய்! நான் நின்னை  சரணடைந்தேன்!



Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி