Posts

Showing posts from September, 2022

காதல் மட்டும் காதல் செய்பவனை(ளை) வெறுப்பதே இல்லை!

Image
  காதலி காதலை வெறுத்தாலும், காதலனை வெறுத்தாலும், காதல் மட்டும் காதல் செய்பவனை(ளை) வெறுப்பதே இல்லை! அன்பும், காதலும் கணவன் மனைவியோ? ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தாலும், நேசம் மட்டும் குறைவதே இல்லை… முன்பின் தெரியாத முகம், அன்பிற்காக, யாரோ… யாருக்காகவோ… ஒரு துளி கண்ணீர் சிந்தும் போது பேரன்பு ஊற்றெடுக்கிறது… இதுதான் மானுடத்தின் சிறப்போ! அதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது… அன்போ, காதலோ அள்ளி, அள்ளி கொடுங்கள்…. அதை கொடுப்பதற்கு மட்டுமே நமக்கு உரிமை உண்டு.... ஆனால், ஒரு போதும் அதை மற்றவரிடம் இருந்து எதிர்பார்க்காதீர்கள்…. அன்பு எதிர்பார்க்கும் சிலரை பித்தனாக்கிவிடும்… காதல் எதிர்பார்க்கும் சிலரை   பைத்தியக்காரன் ஆக்கிவிடும். அன்பு அதிகமாகும் போது சிவம் பிறக்கும்! காதல் அதிகமாகும் போது கவி பிறக்கும்! ஆயினும், கவி வடிவில் சிவம் சிரித்து நிற்கும். ஏனெனில், அன்பும், காதலும் சிவம் சக்தி போல் ஒன்றோடு ஒன்று கலந்தது.... காதலியுங்கள்.... காதல் உங்களை காதலிக்கும் வரை.....                          

கொஞ்சம் நேரம் கொடு! உன்னையும் காதலிக்க கற்றுக்கொள்கிறேன்!

Image
  இளமையின் கனவுகள் நொறுக்கப்பட்ட பின்னரும் இலக்கு தெரியாமல் பயணிக்கிறேன்… அம்மை அப்பனோடு மட்டுமே இனி வாழ்க்கை பய ணம் போதும் என மனம் விரும்புகிறது… அம்மை அப்பனோ அருகில் வரமுடியாத வெகுதூரத்தில் என் செய்வேன்? காட்டு வெளியா? கடற்கரையா? காலம் தான் இனி முடிவு செய்யுமென காத்திருக்கிறேன்… நகைச்சுவை சொல்ல நண்பன் இல்லை… நா ருசிக்கு நளபாகம் இல்லை… நறுமணம் கமழும் மலர்கள் இல்லை… நதியே,ரதியே, கதியே என நான் உளர எனக்கென ஒரு தேன்மொழி இல்லை….  உணர்வுகளை கடத்தும் சில திரைப்படங்களோடு பயணிக்கும் போது மட்டுமே மனம் லயிக்கிறது! அன்னைமடி சுகத்தின் ஆனந்தம் தருகிறது!   பிழைப்புக்கு பஞ்சமில்லை… தூரத்து வெளிச்சம் மட்டும் கண்ணுக்கு தெரிகிறது… ஆயினும், வெறுமை மட்டும் என்னை விரும்பி கொண்டே இருக்கிறது…  நான் அதை விரும்பாத போதிலும்! பரவாயில்லை, உனக்காவது என்னை பிடித்திருக்கிறதே! கொஞ்சம் நேரம் கொடு! உன்னையும் காதலிக்க கற்றுக்கொள்கிறேன்! பிறப்பறுத்து விட்டான் பிறைசூடன்… மோட்சத்திற்காக காத்திருக்கிறேன்,   பட்டினத்தாரை போல எனக்கும் நுனிகரும்பு இனிக்கும் நாள் எந்நாளோ?  

உன் மனிதம் கேள்விக்குறியாகும்?

Image
  சேமிப்புகள் கரையும் போதும், சிக்கனம் சிரிக்கும் போதும், உறவுகள் உதாசீனப்படுத்தும் போதும், உனக்கினி யாருமில்லை என உணரும்போதும், வறுமை குடிக்கொள்ளும் போதும், மனதை வெறுமை ஆக்கிரமிக்கும்… வாழ்க்கை கேள்விக்குறியாகும்! மரணம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும், துணிவு வாள் தூக்கி நிற்கும், உன் மனிதம் கேள்விக்குறியாகும்? உன்னையே அது தோலுரித்துக் காட்டும்! சித்தநாதன் அருவமாய் பார்ப்பான்… வேறு வழியில்லை! சரணடைந்து விடு சங்கரனை இனி சகலமும் அவன் தான் என்று… அம்மையப்பனாய் அவனே வருவான் அருள்மழையும் பொழிவான்! இதயம் இனித்திடும் இன்பமும் தருவான்… ஓம் நமசிவாய!  

என் சுவாசக் காற்றே

Image
  நீரூற்றின் தேனூற்று….. கவி எழுத தெரியாது, கவியமுது படைக்கிறேன்! கலை அது தெரியாது, கலை நயம் ரசிக்கிறேன்! நிலா, ஒளி, தங்கம், சுடிதார், சன்கிளாஸ் அனைத்திலும் அவள் முகம்! திருமணம் நிகழாதென தெரிந்தும் காதல் வரம் கேட்டாள்… கொடுத்துவிட்டேன் என் திருமன(த்)தை! உச்சிதனை முகர்ந்தால் உன் சுவாசம்! செடிகளை நேசிக்கிறேன்! பூக்களோடு சிரிக்கிறேன்! மரங்களை கட்டிப்பிடிக்கிறேன்! உன் சுவாசக்காற்றில் உயிர்வாழும் இவையெல்லாம் எத்துணை பேறு பெற்றவை! இவை மட்டுமா?... நானும் தான்.... என் சுவாசக் காற்றே! என் சுவாசக் காற்றே! உன் நினைவுகள் என் சுவாசமானது…..