காதல் மட்டும் காதல் செய்பவனை(ளை) வெறுப்பதே இல்லை!

 

காதலி காதலை வெறுத்தாலும், காதலனை வெறுத்தாலும், காதல் மட்டும் காதல் செய்பவனை(ளை) வெறுப்பதே இல்லை!

அன்பும், காதலும் கணவன் மனைவியோ?

ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தாலும், நேசம் மட்டும் குறைவதே இல்லை…

முன்பின் தெரியாத முகம், அன்பிற்காக, யாரோ… யாருக்காகவோ… ஒரு துளி கண்ணீர் சிந்தும் போது பேரன்பு ஊற்றெடுக்கிறது… இதுதான் மானுடத்தின் சிறப்போ! அதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது…

அன்போ, காதலோ அள்ளி, அள்ளி கொடுங்கள்….

அதை கொடுப்பதற்கு மட்டுமே நமக்கு உரிமை உண்டு....

ஆனால், ஒரு போதும் அதை மற்றவரிடம் இருந்து எதிர்பார்க்காதீர்கள்….

அன்பு எதிர்பார்க்கும் சிலரை பித்தனாக்கிவிடும்…

காதல் எதிர்பார்க்கும் சிலரை  பைத்தியக்காரன் ஆக்கிவிடும்.

அன்பு அதிகமாகும் போது சிவம் பிறக்கும்!

காதல் அதிகமாகும் போது கவி பிறக்கும்!

ஆயினும், கவி வடிவில் சிவம் சிரித்து நிற்கும்.

ஏனெனில், அன்பும், காதலும் சிவம் சக்தி போல் ஒன்றோடு ஒன்று கலந்தது....

காதலியுங்கள்.... காதல் உங்களை காதலிக்கும் வரை.....

 



 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி