எனை அறியாமல் மனம்‌ பறித்தாள்

 ஆஹா...! இதயம் தித்திப்பாய் இனிக்கிறது

தவிக்கிறேன், அலைகிறேன், எனை அறியாமல் புலம்புகிறேன்!

கடற்கரை மணலில் அமர்ந்தவாறு கடல் அலையின் ஓசையோடு ஒரு மவுன உரையாடல்...

என் இத்தனை வருட தேடலின் திருக்குறள் அவள்! 

இறைவியாய் காட்சி தந்தாள், கலந்துரையாடினாள், கரைந்தே விட்டேன்....

அவளை பார்த்த பின்பு பள்ளிப்பருவ மாணவனாய் துளிர்க்கிறது மனது!

என்‌ ஒட்டுமொத்த அன்பின் காதலையெல்லாம் அவள் காலடியில் கொட்டிவிட வேண்டும்...

எப்படி சொல்வது அவளிடம்? சிந்திக்கிறேன்....

நான் சொல்கிறேன் என்றவாறு,

என் உரையாடலை நானே அறியாமல் கேட்டுக் கொண்டிருந்த தென்றல் காற்று என் முகத்தை வருடியபடி நம்பிக்கை கொடுத்து செல்கிறது.... 


Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி