Posts

Showing posts from November, 2021

அக்காவிற்கு அவள் தான் அணியிலக்கணம்

Image
பனி படர்ந்த விடியற்காலை, குளிரில் மயிர்கால்களும் கூச்செறியும்! அரை தூக்கத்தில் முக்காடு போர்வையுடன் கையில் கலர் பொடிகள்.. உடல் நடுங்குகிறது(என்ன தம்பி முழிச்சிட்டியா?- ஒரு குரல்) பகலவன் துயில் எழும் முன்னே…வண்ண, வண்ண மாக்கோலங்கள்! மயிலாய், தாமரையாய், வண்டாய், மலர் பூச்செண்டாய்… கோயில் மணி ஓசை, இனித்திடும் சமயம் சுவை இருக்கிறதோ, இல்லையோ அந்த சுண்டலுக்கும், பொங்கலுக்கும்! இன்றும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்  தொடர்கிறது அந்த ஆனந்தம், கையேந்துவதை விடுவதேயில்லை… பிராணனை பிடிக்க எழுந்திரு என்று பிராணனை எடுத்தார்கள், பிராணனை எடுத்தாலும் பிராணனை பிடித்திருந்தோம்! இன்றோ இரவிலே 11 மணிக்கெல்லாம் வீட்டுவாசலை அலங்கரிக்கின்றன மாக்கோலங்கள்.. சந்திரன் முறைக்கிறான்! பிராணனை மட்டும் பிடிப்பதேயில்லை… மருத்துவமனையிலும், மாத்திரையிலும் பொழுது கழிகிறது!   அக்கரை மருதாணி வெற்றிலாய் சிவக்கும் என்பார்கள், அடித்து பிடித்து ஓடி போய் பறித்ததும் உண்டு அதில் தான் எத்தனை புறக்கணிப்புகள்… மனம் சிவக்கும் மருதாணி கைகளை இன்று பார்க்க முடிவதேயில்லை… அது பெண் அடிமையாம், அதனால் ஒதுக

பன்னீரில் நனைந்த ரோஜா

Image
எலுமிச்சை நிறமவள், ஏகாந்த சுகந்தம் அவள்! கிளி பேசும் கண்ணுக்கு மை இடுவதே இல்லை! இருந்தும் மனம் கொத்தும் பறவை அவள்! அவ்வப்போது புன்னகை பூப்பாள், சிறிது புருவம் உயர்த்துவாள் பன்னீரில் நனைந்த ரோஜாவை போல அவளின் வியர்வை துளிகள்.. கைக்கு எட்டும் தூரத்தில் டிஷ்யூ பேப்பராய் நான்! அலையாத்தி காட்டுக்குள்ளே(அவள் கூந்தலில்)  திக்குதிசை தெரியாமல் சிக்கி தவிக்கிறேன்... அவள் வழிகாட்டாது, ஓரப்பார்வையில் உயிர்பிச்சை இடுகிறாள்.. உள்ளூர வடிகிறேன் நானும் சப்பாத்திக்கள்ளியாய்..! 

எப்படி படிப்பேன் ? நானும் அவளை!

Image
 எழுத்து வசப்பட வேண்டும்  எனில் நிறைய புத்தகம்  படிக்க வேண்டுமாம்!  ஆதியும் அந்தமும் இல்லாமல்  சந்தம் மட்டும் வைத்துக் கொண்டு எப்படி படிப்பேன்  நானும் அவளை! 

அபூர்வ தம்பதிகள்

Image
காதல் யாருக்கு எப்போது பூக்கும் என்று தெரியாது! அதுபோல தான் திருமணமும் யாருக்கு யாருடன் நடைபெறும் என்று அறுதியிட்டு கூற முடியாது! ஆனால் மனம் கொண்டவரை திருமணம் செய்யும் பாக்கியம் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. கேரளாவின் போர்ட் கொச்சினில் அமைந்துள்ள ஆர்ட் கபேயில், அந்த கபே உரிமையாளரின் மகனான ஆனந்த் ஸ்கரியா என்பவர் மார்கஸின் நூற்றாண்டு கால தனிமை எனும் புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறார். (ஆனந்த் ஒரு இடது சாரி சிந்தனையாளர், கேரளாவின் மகாராஜா கல்லூரியில் எஸ்எப்ஐ-ல் தலைவராக இருந்தவர்) அப்போது ஸ்பெயினில் இருந்தும் லண்டனில் இருந்தும் ஒரு 25 பெண்கள் ஒரு வார சுற்றுலாவாக கேரளாவிற்கு வந்தார்கள்.  அவர்கள் அந்த ஆர்ட் கபேயில் உணவு அருந்துவதை பார்த்துக்கொண்டே அந்த புத்தகத்தை  ஆனந்த் வாசித்து கொண்டு இருக்கிறார். அப்போது காயத்ரி கேமிஸ் என்ற பெண் ஒருத்தி ஆனந்திடம் சென்று உனக்கு மார்க்ஸ் என்றால் பிடிக்குமா என்று கேட்கிறாள். அவனும் பிடிக்கும் என்கிறான். இப்படியாக அவர்களுக்குள்ளான உரையாடல் தொடங்குகிறது. ஒரு வார காலத்தில் அவர்களுக்குள் காதலும் மலர ஆரம்பிக்கிறது.     காயத்ரி கேமிஸ் அவள் ஒரு பேரழகி, பார்க்கும்

ஜெய்பீம் - பலகோடி மக்களின் கண்ணீர்துளி

Image
 எந்த ஒரு படைப்பு நம் ஆழ்மனதை உலுக்குகிறதோ... எந்த ஒரு படைப்பு நம் கண்களில் கண்ணீர் வர வைக்கிறதோ..  எந்த ஒரு படைப்பு நம்மை தூங்கவிடாமல் செய்கிறதோ.. அதுவே ஆகச்சிறந்த படைப்பு! அந்த வகையில் ஜெய்பீம் ஒரு ஆகச்சிறந்த உன்னதமான படைப்பு! அதிகார வர்க்கத்தையும், சாதிய திமிர் கொண்ட மனிதர்களையும் அவர்களின் மனசாட்சியை உலுக்கி கேள்வி எழுப்பி அவர்களை தூங்கவிடாமல் மனிதத்தை துளிர்க்கச் செய்யும் அற்புதமான படம் தான் ஜெய்பீம். உண்மையில் நடந்த  பழங்குடியின மக்களின்(இருளர்) வாழ்க்கையில் இழைக்கப்பட்ட அநீதிகளையும், இன்றும் திக்கற்றவர்களாய் திரியும் அவர்களின் நிலைமையையும் இப்படம் கூறுகிறது. இவர்களுக்கு அப்போது வழக்கறிஞராக போராடிய நீதிபதி சந்துருவாகவே சூர்யா வாழ்ந்திருக்கிறார். படத்தின் ஒவ்வோரு பிரேமும் அருமை. பாம்பு பிடிக்க செல்லும் போது பைக்கில் அமர்ந்து செல்லும் ராஜக்கண்ணு. அணிந்து கொள்ள காலணி கூட இல்லாமல் சைலன்சர் சுட்டுவிடும் என்று அதில் கால் வைக்காமல்  சிரமப்பட்டு உட்கார்ந்து செல்லும் போது அவனின் விழிப்புணர்வான அனிச்சை செயல். அவன் தனக்கு சரிசமமாக அமர்ந்து வருகிறான் என்று சைலன்சரில் அவன் கால் சுட வேண்டும் எ