பன்னீரில் நனைந்த ரோஜா

எலுமிச்சை நிறமவள்,

ஏகாந்த சுகந்தம் அவள்!

கிளி பேசும் கண்ணுக்கு மை இடுவதே இல்லை!

இருந்தும் மனம் கொத்தும் பறவை அவள்!

அவ்வப்போது புன்னகை பூப்பாள்,

சிறிது புருவம் உயர்த்துவாள்

பன்னீரில் நனைந்த ரோஜாவை போல

அவளின் வியர்வை துளிகள்..

கைக்கு எட்டும் தூரத்தில் டிஷ்யூ பேப்பராய் நான்!

அலையாத்தி காட்டுக்குள்ளே(அவள் கூந்தலில்) 

திக்குதிசை தெரியாமல் சிக்கி தவிக்கிறேன்...

அவள் வழிகாட்டாது, ஓரப்பார்வையில் உயிர்பிச்சை இடுகிறாள்..

உள்ளூர வடிகிறேன் நானும் சப்பாத்திக்கள்ளியாய்..! 

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி