Posts

Showing posts from December, 2021

கண்ணீரில் உனை தேடுகிறேன்

Image
 கண்ணீரில் உனை தேடுகிறேன். கானல் நீராய் தோன்றுகின்றாய் கவிதையாய் உனை தேடுகின்றேன், காளமேக புலவராய் கானுகின்றாய், பன்னீரில் உனை தேடுகின்றேன். பாரிஜாதமாய் மனம் வீசுகின்றாய் உன் மன பல்லக்கில் எனை தேடுகின்றேன்..! எனை பள்ளத்தில் தள்ளுகின்றாய்! அடங்க மறுக்கும் மனம் போல என் நினைவை, நீ அழிக்க துணிந்தாலும் நான் அத்துமீறிக்கொண்டே இருப்பேன்! 

திருத்துறைப்பூண்டியில் திருவையாறு

Image
 திருவாரூர் மாவட்டம்  திருத்துறைப்பூண்டியில்  நேற்று(16.12.2021, மார்கழி 1) திருத்துறைப்பூண்டியில் திருவையாறு நிகழ்ச்சி முதன்முதலாக நடைப்பெற்றது. 50 தவில் வித்வான்கள், 50 நாதஸ்வர வித்வான்கள் இணைந்து மங்கள இசை முழங்க மனதை குளிரவைக்கும் விதமாக போட்டிப்போட்டு இசைமழை பொழிந்தனர். திருத்துறைப்பூண்டியில் உள்ள ஏபிசி ஜூவல்லர்ஸ், உழவாரப்பணி குழு போன்ற ஆன்மிக அமைப்புகள் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.  திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர்  அய்யா நல்லசிவம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இசைப்பற்றிய விளக்கத்தை பாமர மக்களுக்கு எளிதில் புரியும்படி விளக்கினார்.  யோகா, தியானம் போன்று இசை எவ்வாறு உள்ளுருப்புகளை ஆரோக்கியத்தோடு இயங்க செய்கிறது என்றும் எந்த பண்ணை எவ்வாறு பாட வேண்டும் என்றும் மிக அருமையாக விளக்கினார். 80-90 களின் காலக்கட்டத்தில் வெளிவந்த சலங்கை ஒலி, சிந்து பைரவி, மோகமுள் போன்ற குறிப்பிட தகுந்த படங்களுக்கு பின் தமிழில் இசையை மையப்படுத்தி படங்கள் வெளிவரவில்லை என்றே கூறலாம். மனதை மகிழ்விக்கும் அன்னையின் தாலாட்டாக இசை இருந்துவருவதை யாராலும் மறுக்க இயலாது. அந்த வக

வைகுந்தனுக்கு ஏகாதசி

Image
 பூலோக வைகுண்டம் என்றும், 108 திவ்யதேசங்களில் ஒன்று என்றும் பெருமையோடு அழைக்கப்படுகின்ற திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்) வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது   அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணன் கூறுகிறார். மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளில்... கார்மேனிச் செங்கண் கதிர்மதிப்போல்முகத்தான் நாராயணனே.. என்று திருப்பாவை பாடலின் முதல் பாடலாக ஆண்டாள் மார்கழி மாதத்தின் சிறப்பை வருணித்து கூறுகிறார். தட்சிணாயின காலத்தின் கடைசி மாதம் மார்கழி மாதம் ஆகும்.( தட்சிணாயின காலத்தில் சூரியனின் கதிர்வீச்சு  பகலில் குறைவாகவும், இரவில் குளிர்ச்சி அதிகமாகவும் இருக்கும்) தட்சிணாயின காலம் என்பது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் ஆகும். உத்தராயிண காலம் என்பது  தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் ஆகும். மார்கழியில் விரதம் இருந்து இறைவனை மனதார வழிபட சகல சம்பத்துக்களும் கிடைக்கும் என்பது வெகுஜன மக்களின் நம்பிக்கை. இதன்பொருட்டு மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடுவார

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

Image
 அந்த ஒரு வார்த்தையில் உள்ளம் இனிக்கத்தான் செய்கிறது..! கொவ்வை கனி இதழ் அசைவின் அழகு, பால்கோவாய் இனிப்பாய் அவளின் சிரிப்பு கத்தி விழி வீசும்! கற்பூரம் மணக்கும்..! நெற்றி சுருக்கத்தில்  சறுக்கித்தான் வீழ்கிறது மனம்! வாய் மட்டுமல்ல, கண்களும் சிரிக்கும்! காந்தப் பார்வையில் கவி எழுத துடிக்கும், மனம் கற்பனையில் மிதக்கும்! வர்ணனை  பிதற்றலில் இது ஒன்றே பொருந்தும்  ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’

வந்து எனை ஆட்கொண்டு விடு

Image
 ஆனந்தமே, அற்புதமே, அருட்பெருங்கடலே!அன்னை மடியே,  அப்பன் திருவடி நிழலே! நின்னை சரணடைந்தேன்!  வந்து எனை ஆட்கொண்டு விடு.. காதல் சுவையே.. கட்டுக்கரும்பே! காலம் கடந்த கட்டழகே! கம்பனை மிஞ்சும் கவித்துவம் எனக்கில்லை, எனினும் கம்பரசத்தை மிஞ்சும் அன்புரசம் நான் தருவேன்.. வந்துவிடு, வந்து எனை ஆட்கொண்டு விடு! எண்ணியதெல்லாம் எனக்கு அளித்தாய்! என்னுள்ளம் குளிர வைத்தாய்! இன்பத்தை மட்டும் ஏனோ ஏட்டினில் வைத்தாய்! இடையினில் ஏன் எனை மறந்தாயோ! வந்துவிடு, வந்து எனை ஆட்கொண்டு விடு! பற்றை எல்லாம் பற்றறுக்கும், பட்டொளி வீசிநிற்கும் பார்புகழும் பார்வதி தேவனே.. பயம் எனும் பற்றினை பற்றாது அறுத்துவிட பட்டென ஓடிவந்து விடு பசலையாய் எனை ஆட்கொண்டு விடு! சப்த, நிசப்தமின்றி பரவெளியாய் அலைகிறது மனது, அதை மஞ்சள் நீரில் குளிப்பாட்டி  குங்கும பொட்டு வைக்க குருநாதனே ஓடி வந்துவிடு,.. வந்து எனை ஆட்கொண்டு விடு! முள்ளில் தைத்த இதயமாய் என்னுள்ளம் துடிக்கின்றது! ரணத்தை ஆற்றிடவே, ராகதேவனே! எனை நீ மீட்டிடவே.. வந்து விடு,..  வந்து எனை ஆட்கொண்டு விடு!

அழுகை எனும் போதை

Image
 காதல் விசித்திரமானதுதான்..! கடல் கடந்தாலும், காடு மலை திரிந்தாலும், காலம் கடந்தாலும், காதல் கடுகளவும் குறைவதேயில்லை ஆண்மகனுக்கு..!அவனை அழ வைத்து போதை காண்பது பெண்ணுக்கே உரிய அலாதி இன்பம்.தன்னை விரும்பிய ஒரு ஜீவனை அழ வைத்து ஆனந்தம் காண்கிறாள்... அந்த அழுகை தனக்கான வரப்பிரசாதம் என்று நினைக்கிறாள்..அவனும் அழுகிறான், அழுகிறான், அழுது கொண்டே இருக்கிறான்...! ஆண் மகனது கண்ணீர், பெண் அருந்தும் தேவபானமாக வடிந்து கொண்டே இருக்கிறது. பெண் தொடர்ந்து அருந்திக்கொண்டே இருக்கிறாள்..! பொழுது புலரும் இனிய காலை வேளை, கீச்சிடும் சத்தத்துடன் எலிகள் அங்கும், இங்கும் ஓடி உணவை தேடி அலைகின்றன.வெண் தாமரை குளத்தில் கருவிழி அமைந்தது போன்ற கண்களை உடைய  ஒரு குட்டி தேவதை மாஸ்க்கை அணிந்தவாறு அங்கும், இங்கும் நோட்டமிட அழகாய் கண் சிமிட்டுகிறாள்! சாய், சாய் என்ற ஒலி சத்தம், கண்ணை பறிக்கும் வெளிச்சத்தில் பளீச், பளீச் என்று மின்னும் டிஜிட்டல் போர்டுகள், லேசான சங்கு சத்தத்துடன் நகரும் ரயில் வண்டிகள்.. ஆம்..!  இது சென்னை எழும்பூர் ரயில் நிலையம்.   அதிகாலை பொழுது, முட்டிகள் இரண்டும் முத்தமிடும் தருணம்,... தலைவன், தலைவியோடு அ