Posts

Showing posts from 2019

உடல் எனும் அற்புதம்

Image
அண்டத்திலே உள்ளது பிண்டத்திலே பிண்டத்திலே உள்ளது அண்டத்திலே என்று சித்தர்கள் கூற கேட்டிருப்போம். இதன் பொருள்  நம் உடலானது இயற்கையின்  அம்சம் நிறைந்தது.  இந்த பூமியில் உள்ள பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு, ஆகிய அனைத்தும் நம் உடலில் உள்ளது. இந்த பஞ்ச பூதங்களான  அனைத்தும் சேர்ந்துதான் நம் உடலின் அனைத்தும் உறுப்புகளும் தோற்றுவிக்கப்படுகின்றன.  இந்த உடலை மூன்று வகையாக சித்தர்கள் பிறித்து கூறுகின்றனர்.  அதாவது  வாதம், பித்தம், சிலேத்துமம் இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களும் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் அடங்குவர்.  இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானல், ஒருவர் உடல் வெப்பம் நிறைந்த உடலாகவோ,  குளிர்ச்சி நிறைந்த உடலாகவோ, அல்லது வாயு நிறைந்த உடலாகவோ இருக்கும். இவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவை தன் உடம்பு ஏற்றுக்கொள்கிறதா? என்பதை அறிந்து  அதற்கு தகுந்தவாறு உணவை உட்கொள்ள  வேண்டும்.  மேலும் நம் உடம்புக்கு ஏற்படும் அனைத்தும் ஒவ்வாமையையும் தீர்க்கக் கூடிய மருந்து இந்த பூமியிலேயே இறைவனால் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.  நம் உடலானது மிகவும் அற்புதம் நிறைந்த ஒரு அழகான ஆலயம் ஆகும்

தன்னம்பிக்கை கொள்ளுங்கள்..

Image
தன்னம்பிக்கை இந்த ஒற்றைச் சொல் மிகவும் சக்தி வாய்ந்தது. இது நம் வாழ்க்கையை மாற்றும் சக்தியை கொண்டது. இன்று மிகப்பெரும் பிரச்சனை வேலையின்மை அல்லது பிடித்த வேலை கிடைக்காமல் இருப்பது. இதனால் நாம் முயன்று, முயன்று இறுதியில் ஒரு வெறுப்பிற்க்கு ஆளாகி வாழ்க்கையை வெறுக்கும் நிலைக்கு செல்கிறோம். இதில் காதல் செய்பவர்கள் எனில் அவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.  பிடித்த வேலையின்மை, பணப்பிரச்சனை, காதல் தோல்வி, தங்கை அல்லது அக்காவின் திருமணம், புதிதாக வீடு கட்ட வேண்டும், கடன் பிரச்சனை, வீட்டுப்பிரச்சனை, ஏறிக்கொண்டே இருக்கும் நம் வயதைப் பற்றிய  கவலை  இப்படி பல்வேறு பிரச்சனைகள் நம்மை வாட்டும். இதில் தன்னம்பிக்கை மட்டும் கொண்டால் மாறிவிடுமா? என்ன?.   மாறாது நிச்சயம் மாறாது? பின் தன்னம்பிக்கை என்பதன் பொருள்தான் என்ன?  அதற்கு முதலில் நாம் நம்மைப்பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். நம்மில் பலருக்கும் உள்ள பிரச்சனை நாம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் நமக்கு பிடித்தது எது?என்று இன்றும் பலருக்கு தெரியாது. இதனால் பாதைகள் தவறிச் சென்று தன் வாழ்க்கையின் பல்வேறு காலங்களை வீணாக

பெற்றோரை மதியுங்கள்

Image
படைத்தது சிவனாயினும், பெற்றது சீவனாகும். நாம் இவ்வுலகிற்கு வர காரணமாக இருந்தவர்கள் நம் தாய்,தந்தையர்கள் ஆவர். ஒருவன் அல்லது ஒருவள் வாலிப வயதை கடக்கும் போது அவர்களது பெற்றோர் குழந்தைகளாக மாறுகின்றனர். அவர்களுடைய எதிர்ப்பார்ப்பில் ஒரு புது நம்பிக்கை பிறக்கிறது.  நமக்காக நம் மகனோ, மகளோ இருக்கிறார்கள் என்று  நினைக்கிறார்கள். நாம் வாழும் இப்புவியில் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று என்னக்கூடிய  அன்பு உள்ளங்கள் இருக்கிறது என்றால் அது நம்மை பெற்ற அம்மா, அப்பாதான்.      புரிதலில் வேண்டுமானால் சண்டை , சச்சரவுகள் வரலாம். அன்பில் ஒருப்போதும் அவ்வாறு இருக்காது. காதலிக்கும் காதலி மீது  அன்பு செலுத்துவது போன்று, வரவிருக்கும் மனைவி மீது அன்பு செலுத்துவது போன்று நம் அப்பா, அம்மா மீது அன்பு செலுத்தும்போது  அங்கு பேரண்பு ஊற்றெடுக்க ஆரம்பிப்பதை நம்மால் உணர இயலும்.  நாம் இம்மண்ணில் வருவதற்கு காரணமாக இருந்த சீவன்கள்  மகிழும்போது நம் பிறந்த நோக்கத்தின் பாதி பயணங்கள் பூர்த்தியடைந்ததை நம்மால்  உணர முடியும்.  நம் அடுத்த பாதி பயணத்தின் பாதை தன்னாலே நமக்கு விளங்கும். இதை விளக்கும் விதமாகத்தான் ”அன்னையு

உணவே மருந்து......

Image
நாம் உண்ணும் உணவுக்கும் நம் செயல்பாடுக்கும் மிக முக்கிய தொடர்பு இருப்பதை நம்மால் அறிய முடியும். பெறும்பாலும் இனிப்பு பதார்தங்கள், குளிரூட்டப்பட்ட ரசாயனம் ஏற்றப்பட்ட இனிப்பு பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவற்றை நாம் தவிக்கும் போது நம்முள் ஏற்படும் மாற்றத்தை நம்மால் உணர முடியும். முடிந்தவரை சரிவிகித உணவு உண்ண முயற்சி செய்ய வேண்டும்.  பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை  பயன்படுத்தலாம். காய்கறிகளை நாம் சமையலுக்கு உட்படுத்தும்போது  எண்ணெயின் அளவை குறைத்து பயன்படுத்த வேண்டும்.  பெறும்பாலும் நல்ல எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ் ஆயில் பயன்படுத்துவது மிகுந்த நற்பலனை தரும். தினமும் குறைந்தது இரண்டு பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். (ஒரு ஆப்பிள், இரண்டு வாழைப்பழம்) நாம் நம் உடலை தூக்கும் அளவுக்கு தகுதியாக இருக்க வேண்டும்.  நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் உடலை குறைக்க முடியவில்லை என்று சொல்பவர்கள்  அரிசி உணவின் அளவை குறைத்து, எண்ணெயில் பொறித்த உணவு பதார்தங்களை முற்றிலும் தவிர்க்கும் போது நீங்கள் எதிர்பார்க்கும் உடலைமைப்பு உங்களை நாடி வரும்.  நம் உடலுக்கு எவ்வளவு உணவு

உடலினை உறுதி செய்

Image
காமமாகிய சக்தியை நாம் கடப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றுதான். நாம் என்னதான் நம்மை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், கண் இமைக்கும் நேரத்தில் நம் கவனத்தை சிதற செய்து நம்மை வீழ்த்தும் சக்தி அதற்கு  உண்டு. இந்த காமத்தை கண்டு அஞ்சாத சித்தர்களோ, மகான்களோ கிடையாது.   வள்ளலார் இது குறித்து வேண்டும் போது  மரூஉ பெண்ணாசை மறக்க வேண்டும்  என்கிறார். ( அதாவது மறு ஜென்மம் ஒன்று இருந்தால் அதில் பெண்ணாசையை மறக்க வேண்டும் என்கிறார்.) வள்ளலார் முதற்கொண்டு இந்த காமத்திற்கு அஞ்சாதவர்களே கிடையாது. நமக்கு முன்பு முக்தி அடைந்த அனைவருமே இந்த காமத்தை நன்கு அறிந்து அதை மற்றொரு வழியில் மடைமாற்றம் செய்தனர். நான் கடவுளை வேண்டுகிறேன்,பிரார்த்தனை செய்கிறேன் ,இருந்தும் என்னால் காமத்தை தவிர்க்க முடியவில்லை, ஆனால் நான் அதை தவிர்க்க விரும்புகிறேன். நான் இதை மடைமாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்?  இக்கேள்வி அனைவருக்கும் எழுவது இயல்பே! நாம் முதலில்  நம் உடலில் காமம் வரும் நேரத்தில் ஏற்படும் ரசாயண மாற்றத்தை அறிய முற்பட வேண்டும். அவ்வாறு முற்படும் போது சில விசயங்கள் நமக்கு விளங்கும்.  அதாவது காமம் வருவதற்கு முன்

காமத்தை அறிய முற்படுங்கள்

Image
இறைவன் ஒருவனே, அவனுக்கென்று இடைத் தரகர்கள் யாரும்  கிடையாது. நீங்கள் அவனை எவ்வாறு நினைக்கிறீர்களோ  அவன் அவ்வாறு உங்களுக்கு காட்சி தருவான். பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. அவனது படைப்பில் ஓர் அறிவு உயிரினம்  முதல் ஆறு அறிவு பெற்ற மனிதன் வரை அனைவரும் சமம். நாம் வழிவழியாக  பின்பற்றி வரும் பக்தி மார்க்கமான சடங்குகள், வழிப்பாடுகள், அனைத்தும் நம் முன்னோர்கள் வழியாக பின்பற்றி வந்தவை. அவற்றை விட்டு வெளியே வருவது என்பது மிகவும் கடினமான ஒன்றுதான். நான் கோவிலுக்கு செல்கிறேன். அதன் மகத்துவத்தை உணர்கிறேன் , அதை இல்லை என்று நீங்கள் எவ்வாறு கூறலாம். என்று நீங்கள் கேட்கும் கேள்வி நியாமானதே! உண்மையில் நீங்கள் கோவிலுக்கு சென்றதால் அந்த மகத்துவத்தை உணரவில்லை. நீங்கள் இறைவனை பற்றி உங்கள் மனதில் நினைத்ததால் அந்த மகத்துவத்தை உணர்ந்தீர்கள் என்பதே உண்மை.    இதன் உண்மைத்தன்மையை சிவவாக்கியர் இவ்வாறு கூறுகிறார். ”நட்டக்கல்லை  தெய்வம் என்று நாலு புக்ஷ்பம் சாத்தியே! முனமுன வென சொல்லும் மந்திரம் ஏதேடா! நட்டக்கல்லும் பேசுமோ? நாதனும் உள் இருக்கையில் ! சுட்டசட்டி சட்டுவம் கறிச்

இறைவனைக் காதலியுங்கள்

Image
உணக்கென உருகினேன், உயிரில் கரைகிறேன், அனலென எரிகிறேன் , அலையாய் உடைகிறேன்.  இப்பாடலின் பொருள் இறைக்காதலில் நிச்சயம் சாத்தியம் ஆகும்   .   இறைத்தேடல் உள்ள அனைவரும் முதலில் செய்ய வேண்டிய ஒன்று காதல். இறைவனை காதலியுங்கள் உங்கள் காதலை ஏற்க இறைவன் காத்துக்கொண்டிருப்பான். இந்த காதலில் மட்டும்தான் தோல்வி என்பதே கிடையாது.  நீங்கள் மனைவியை காதிலிப்பது போன்று, குழந்தைகளை காதலிப்பது போன்று, காதலியை காதல் செய்வது போன்று, இறைவனை காதல் செய்யுங்கள். பக்திமார்க்கத்தில் ஈடுப்பட்டுள்ள அன்பர்களை  இது ஞான மார்க்கத்திற்க்கு அழைத்துச் செல்லும். இதை மாணிக்கவாசகர் இவ்வாறு கூறுகிறார்.  ”தித்திக்கும் சிவபெருமான் தானே வந்து என் உள்ளம் புகுந்து அருள் செய்தான் தவம் செய்தேன், தவம் செய்தேன் அருள் செய்தான் ” என்கிறார். இறைவன் நம் உடம்பில் உயிராக இருக்கிறான். இதனை உணர்ந்து வள்ளலார் கூறிய ஜீவகாருண்யத்தை பின்பற்ற முயற்சி செய்தால் நாம் அதன் பரிபூரணத்தை உணரமுடியும். இந்த உள்ளுணர்வை அவரவர்கள் மட்டுமே உணர முடியும். மற்றவர்களுக்கு எடுத்துக் கூற இயலாது. நீங்கள் ஒருமுறை காதல் செய்து விட்டால், இறைவன் உங்கள் அன்பின்