Love- காதல்


                        காதல் (LOVE)

காதல்- உள்ளத்து மகிழ்வின் பேரின்பம்.

காதல்- இதயத்தை சிவந்திடச்செய்யும் இனிப்பான தாம்பூலம்.

காதல்- ஏதோ வெற்றிக்கொண்ட பூரிப்பு

காதல்- தன்னம்பிக்கை கொடுக்கும் தனிப்பெரும் சக்தி

காதல்- சித்தனையும், பித்தனாக்கும். பித்தனையும், சித்தனாக்கும்.

காதல்- வாழ்வின் பரிபூரணம்.

காதல்- கண்கள் பேசிக்கொள்ளும் மவுன மொழி

காதல்- ஒரு சுகமான வலி

காதல்- கவிதைகளின் ஆரம்பம்.

காதல்- ரசனையின் உச்சப்பட்சம்.

காதல்- ஒரு வித சுகமான போதை

காதல்- இருமனங்கள் பரிமாறிக்கொள்ளும் மன விருந்து

காதல்- நினைத்தாலே இனிக்கும்.

காதல்- எதிர்பாலின வெற்றி

காதல்- இரு இதயங்களின் பறிதவிப்பு

காதல்- நினைத்தாலே வலிக்கும்.

காதல்- காமத்தூண்டலின் மின் பொறி.

காதல்- பற்றிகொண்டே வரும் பேரிளம்தீ

காதல்- வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை.

காதல்- கண்ணீரின் அபிஷேகம்.

காதல்- அழமுடியாத ஆழ்மனத்துயரம்

காதல்- பேரண்பின் வெளிப்பாடு

 காதல்- தன்னையே தொலைத்து,தானும் தொலைந்து போதல்

காதல்- கவித்துவத்தின் முதற்புள்ளி

காதல்- கற்பனையின் சாம்ராஜ்ஜியம்

காதல்- காற்றின் மொழி அறிதல்

காதல்- வலியை சுமக்கும் வலி

காதல்- மறக்கமுடியாத மன வேதனை

காதல்-வாழ்வின் பெருந்தேடல்

காதல்- வலியை கொடுத்து வலியை பெறுவது

காதல்- அழிக்கமுடியாத ஓவியம்

காதல்- சித்திரம் பேசும் சிறுபஞ்ச பூதம்

காதல்- சாதி, மதம் கடந்த மனிதநேயம்

காதல்- ஒரு அணையா விளக்கு

 காதல்- பண்படுதலின் உயர்நிலை

காதல்- எதிர்பார்ப்பில்லா தியாகம்

காதல்- திருமணத்தின் தொடக்கம்




காதல்- அன்பால் அன்பை வெற்றிக்கொள்வது

காதல்- பிரிதலின் நினைவில் வாழ்தல்

காதல்- கடுந்துயரம்

காதல்- மெய்மறந்த நிலை

காதல்- பெயர் கேட்டலின் இன்பம்

காதல்- முடிவில்லா தொடக்கம்

 காதல்- நேசத்தின் பாசம்

காதல்- தீரா வேட்கையின் மோகம்

காதல்- கெஞ்சலின் கொஞ்சல்

காதல்-கொஞ்சலின் கெஞ்சல்

காதல்- சத்தமில்லா ஓசை

காதல்- மாபெரும் வெள்ளொளி

காதல்- வெட்கத்தின் உச்சம்

காதல்- மனமயக்கும் சிறு புன்னகை

காதல்- வருடலின் நெருடல்

காதல்- இதயம் வேகும் பனிப்பாறை

காதல்- கடலளவின் நேசிப்பு

காதல்- மலையளவின் வெறுப்பு

காதல்- ஒன்றுக்குள்ளும் அடக்க முடியாத அனைத்தும் அந்த ஒன்றுக்குள் அடங்கும் அதிசயம்.    காதலிக்கவே கூடாது, காதலிக்காமல் இறக்கவும் கூடாது. 

காதல் ஒரு முடிவில்லாத தொடர் வாக்கியம் . முதல் வாக்கியத்தை அறிந்தவர் உண்டு, முற்று வாக்கியத்தை அறிந்தவர் இல்லை. பூமித்தோன்றலின் முதலாக தோன்றி பல பரிணாமம் பெற்று இன்றும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. நாமும் வளர்த்து கொண்டே இருக்கிறோம். வளர்த்துக்கொண்டே இருப்போம்.


 

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி