அன்பு செய் மனமே..!

அம்பு தொய்த மனமே மனமே.. 
ஆராத ரணமே.. ரணமே.. 
அழுது புலம்புகிறாய்... 
விளக்கொளியை சுற்றி வர 
நீ ஒன்றும் விட்டில் பூச்சி அல்ல..! 
விஞ்ஞானம் வியக்கும் வின்னொளி நீ..!
மன்னவன் படி ஏற விண்ணவன் பணி செய்வான்.. 
மாய உலகத்தோர் மதிமயங்கும் மட்டற்ற மனித பிறவி அல்ல நீ.. 
மானுட சமூகத்தின் மகத்தான பிறவி நீ... 
யார் மீதும் பழிவேண்டா... 
அல்லல் சுகமே அருஞ்சுவை என 
அலாதி இன்பம் கொண்டு 
தீஞ்சுவை என தீண்டு... 
விண்ணுற பறப்பாய்.. 
விண்ணொளி பிடிப்பாய்..
வீடு பேறடைவாய்..! 
எப்போதும் உடன் இருப்பவன் 
நாதன் நாமம் நமச்சிவாயவே..!

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி