Posts

Showing posts from January, 2022

கோடான கோடி முத்தங்கள்

Image
 தமிழ் அது மொழியல்ல உயிர்... ஒட்டுமொத்த உணர்வுகளின் கோபம் அது! தமிழினத்தின் தலைச்சிறந்த பொக்கிஷம் அது!  தரணியில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தகப்பனாய் வீற்றிருக்கும் தலைமை பீடம் அது! வடமயமாக்கல் (சமஸ்கிருதம், பார்ப்பனியம்) மதம் தரித்து வந்தாலும்,  மனிதம் தவிர்த்து வந்தாலும்,  இந்தி எனும் முகமூடி அணிந்து வந்தாலும் எள்ளி நகையாடி கொண்டே இருக்கும்... அன்பே சிவம்- என் அய்யன் திருமூலர் வாழ்ந்த புண்ணிய பூமி இது! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணையாய் என் அகத்துக்குள் இனிக்கிறான்... அள்ளியே கொடுக்கிறான் - வள்ளலாரின் அருள் நிறைந்த மண் இது... நட்டக்கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே, மொனமொனவென சொல்லும் மந்திரம் ஏதடா! நட்டக்கல்லும் பேசுமோ நாதனும் உள் இருக்கையிலே... சுட்ட சட்டி  சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!- சித்தர் சிவவாக்கியரின் சித்தம் தெளிந்த பூமி இது... வடமயமாக்கல் எதிர்ப்பு என்பது  எம் தமிழினத்தின்  பாரம்பரிய சொத்து...  எம் தலைமுறை மட்டும் விட்டுவிடுமா என்ன? இங்கு மனிதம் ஒரு போதும் அழியாது. அமுதே! தமிழே! அன்னைமடியே உன்னை ஆராதிக்கிறேன்... உனை எவர் சீண்ட வரினும், அடித்து நொறுக்குவேன் என் எழுத்து

நவநாகரீகம் பசப்பும் பசப்பிகள்

Image
 நவநாகரீகம் எனும் பெயரில் அழகான உணர்வுகளை கொன்று கொண்டே இருக்கிறார்கள்... தன்னை உணர்வுகளுக்கு அடிமையாகாத அப்பாற்பட்ட மனிதர்களாக சித்தரிக்கிறார்கள்! இறுதியில் தன்னை மனிதமிருகமாய் மாற்றி தன் சுயநலம் மட்டுமே பெரிதென வாழ்கிறார்கள்! இந்த நவநாகரீக கோமாளிகள்! இவர்கள் இம்மண்ணில் வாழத் தகுதியற்றவர்கள்... அன்பை அழித்து, அரவணைப்பை மிதித்து, ஆதரவினை கொன்று, பற்றற்றவர்களாக பசப்பும் இவர்கள் வாழ்வதை விட சாவதே மேல்!

பரிவட்டம் சூடுகிறான் எங்கள் இளவரசன்

Image
 பட்டொளி பளபளக்க ... பவனி எங்கும் பூச்சொறிய, எங்கள் பட்டத்து இளவரசன் ( ஜெயராஜா) குறுநகையுடன் பரிவட்டம் சூடுகிறான்...! இவன் அரியணையை அலங்கரிக்க, அன்பினில் தான் திளைக்க, மகுடத்திற்கு மணி மகுடமாய், மகாராணி வர்ஷா(மழை மகளாய்) கரம் கோர்க்கிறாள்...! சுற்றம் புடை சூழ, சுகந்தம் மனம் கமழ, சுவை நாவினில் இனிக்க!  இன்பம் பொங்கும் இந்நாளை போன்று எந்நாளும்  அகம் மகிழ்ந்து அன்புடன் வாழ நட்புடன் வாழ்த்துகிறேன். வள்ளுவனின் முப்பாலாய், முக்கனியின் தீம்சுவையாய்,   முத்தமிழின் தேன் கனியாய்,  காதல் போதையில் கற்கண்டாய் களிப்புற்று வாழ்க... இறைவன் ஆசிகளுடன், வாழ்க  வளமுடன்!

கிறுக்குவதற்கு நிச்சயம் வரிகள் வரும்.

Image
 தேட ஆள் இல்லாத போது  தொலைந்து போவதில்லை அர்த்தமில்லை தான்! தொலைந்து போனாலாவது யாரேனும்  தேட வரமாட்டார்களா?  என்ற ஆசையில் தான் பலரும்  தொலைந்து போகிறார்கள்... தங்களை தொலைத்து போகிறார்கள்! தேடுவதற்கு ஆள் வருமோ? இல்லையோ?தெரியாது.  கிறுக்குவதற்கு நிச்சயம் வரிகள் வரும். அந்த வரிகளின் உயிர்ப்பில் உயிர்த்தெழுவீர்கள்! எனவே தொலைந்து போக ஆசை எனில்  மகிழ்ச்சியாக தொலைந்து போங்கள்!

உறுபெறுதல் சாத்தியமா?

Image
இப்போதெல்லாம் மனம் அலங்கரித்து கொள்ள விரும்புவதேயில்லை...  அலங்கரிப்பது எதற்கு?  வசீகரிக்கத்தானே.....  வசீகரம் எதற்கு?  ஈர்க்கத்தானே....  ஈர்க்கப்பட்ட வெல்லம் உருகி,  கரைந்து வழிந்தோடிய பின்  உறுபெறுதல் சாத்தியமா?  நின் இன்முகம் காணாமல்...! 

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Image
 

நான் யார்?

Image
 உள்ளூர ஒலிக்கும் ஊமை உணர்வுகளுக்கு உயிர் கொடுக்க துடிக்கின்றேன்...  அண்டம் முதல் பிண்டம் வரை அத்தனை அழகையும் அணு அணுவாய் ரசித்து அச்சில் கோர்க்க ரசிக்கின்றேன்..  கண்ணதாசன், வைரமுத்து வரிகளுக்கு மாற்றாக வட்டெழுத்து சுட்டுவிட சுட்டெழுத்து தேடுகின்றேன்..  தமிழ் மீது காதல் கொண்டு காட்டுமிராண்டியாய் கேட்பாரற்று கிறுக்குகிறேன்...  இசையில் ஆரோகனம் தெரியும் அவுரோகனம் தெரியும் ஆழ்ந்து ஊன்ற தெரியாது...  தொலைக்கிறேன்.. தொலைந்து போகிறேன்... சட்டென பறந்து போகிறேன்....  சமூக அக்கறையாளனா? தெரியாது. சற்று சகிப்புத்தன்மை உண்டு.  முற்றிலும் மறக்காது, மறைக்காது முழுவதும் உளறிவிட நான் என்ன பைத்தியக்காரனா?  காதல் அறியாதவர்கள், கனிமொழி சுவைக்காதவர்கள்... தாக்கம் இல்லாதவர்கள், தனிச்சொல் அறியாதவர்கள்...  எனை பெண் பித்தன் என்றோ, பெரும்பாவி என்றோ வசைப்பாடக் கூடும்...  வசையிலும் அசை சேர்க்கும் தமிழ் ஓசை ரசிகன் நான்! இருப்பினும் நான் யார்?  எனை பற்றி அறிய என்னை நானே தேடுகிறேன்...  உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்....! 

சிவகாமிக்கு என் அர்ச்சனை

Image
 சிவனை எதிர்பார்த்து காத்திருக்கும் சிவகாமியே...  உன் சிவன் நானோ என்று உள்ளுக்குள் ஒரே நர்த்தனம்!  காலங்கள் ஓடினாலும், கண்மணி அவளின் கண்பார்வை மட்டும் கலையவே இல்லை...  முகத்தில் மலர்ச்சி... மற்றற்ற மகிழ்ச்சி!  வடக்கத்திகள் வாய்பிளக்கும் கவிபாடும் லோலாக்கு....  கவியின் சிறு அசைவில் சில்லுசில்லாய் சிதறுகிறேன்..!  காலங்கள் பதில் சொல்லும், காத்திரு கண்மணியே...  கற்பனையில் அர்ச்சிக்கிறேன்! அர்ச்சனையை ஏற்றுக்கொள்....  பேரன்போடு பெருந்துணை கிடைத்து, பெரும் புகழோடு பாரினில் வாழ்ந்திட என் அகம் இனித்த நல்வாழ்த்துக்கள்....  பெருந்துணை நான் என்றால் பேரின்பம் வேறு உண்டோ?