நான் யார்?

 உள்ளூர ஒலிக்கும் ஊமை உணர்வுகளுக்கு உயிர் கொடுக்க துடிக்கின்றேன்... 

அண்டம் முதல் பிண்டம் வரை அத்தனை அழகையும் அணு அணுவாய் ரசித்து அச்சில் கோர்க்க ரசிக்கின்றேன்.. 

கண்ணதாசன், வைரமுத்து வரிகளுக்கு மாற்றாக வட்டெழுத்து சுட்டுவிட சுட்டெழுத்து தேடுகின்றேன்.. 

தமிழ் மீது காதல் கொண்டு காட்டுமிராண்டியாய் கேட்பாரற்று கிறுக்குகிறேன்... 

இசையில் ஆரோகனம் தெரியும் அவுரோகனம் தெரியும் ஆழ்ந்து ஊன்ற தெரியாது... 

தொலைக்கிறேன்.. தொலைந்து போகிறேன்... சட்டென பறந்து போகிறேன்.... 

சமூக அக்கறையாளனா? தெரியாது. சற்று சகிப்புத்தன்மை உண்டு. 

முற்றிலும் மறக்காது, மறைக்காது முழுவதும் உளறிவிட நான் என்ன பைத்தியக்காரனா? 

காதல் அறியாதவர்கள், கனிமொழி சுவைக்காதவர்கள்... தாக்கம் இல்லாதவர்கள், தனிச்சொல் அறியாதவர்கள்... 

எனை பெண் பித்தன் என்றோ, பெரும்பாவி என்றோ வசைப்பாடக் கூடும்... 

வசையிலும் அசை சேர்க்கும் தமிழ் ஓசை ரசிகன் நான்! இருப்பினும் நான் யார்? 

எனை பற்றி அறிய என்னை நானே தேடுகிறேன்... 

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்....! 

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி