பரிவட்டம் சூடுகிறான் எங்கள் இளவரசன்

 பட்டொளி பளபளக்க ...

பவனி எங்கும் பூச்சொறிய,

எங்கள் பட்டத்து இளவரசன் ( ஜெயராஜா) குறுநகையுடன்

பரிவட்டம் சூடுகிறான்...!

இவன் அரியணையை அலங்கரிக்க,

அன்பினில் தான் திளைக்க,

மகுடத்திற்கு மணி மகுடமாய்,

மகாராணி வர்ஷா(மழை மகளாய்) கரம் கோர்க்கிறாள்...!

சுற்றம் புடை சூழ,

சுகந்தம் மனம் கமழ,

சுவை நாவினில் இனிக்க! 

இன்பம் பொங்கும் இந்நாளை போன்று எந்நாளும் 

அகம் மகிழ்ந்து அன்புடன் வாழ நட்புடன் வாழ்த்துகிறேன்.

வள்ளுவனின் முப்பாலாய்,

முக்கனியின் தீம்சுவையாய்,  

முத்தமிழின் தேன் கனியாய், 

காதல் போதையில் கற்கண்டாய் களிப்புற்று வாழ்க...

இறைவன் ஆசிகளுடன்,

வாழ்க  வளமுடன்!

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி