அருட்பா!

என்னுள் இருந்து என்னுள் கலந்து என்னுள் மலர்ந்து என்னுள் இனித்தாய்!

எனை அறிய வைத்தாய்!

ஊன் குறைய வைத்தாய்! 

உள்ளம் தெளிய வைத்தாய்! 

காதலிக்க கற்றுக் கொடுத்தாய்! 

 அழுகையின் சுகம் தந்தாய்! 

ஆறுதலாய் நீயே வந்தாய்! 

பொறுமையை சொல்லித் தந்தாய்! 

புது உலகம் நீ படை என்றாய்! 

வெறுமையை விலக்கி வைத்தாய்! 

ஊக்கம் தருவேன் ஓடென்றாய்!

ஓடுகிறேன் உன் தயவால்! வெற்றியாக நீயே வருவாய் !

அப்பா.. அப்பா...அம்மையப்பா...

நீ என் அன்னையப்பா!

 உன்னையல்லால் வேறு தெய்வம் இல்லையப்பா!  

தித்திப்பா! இனிப்பா! கரும்பா!

 சொற்களில் இல்லை உன்னை வர்ணிக்கும் 'பா' ..

அப்பா... இது நான் எழுதும் அருட்பா!

என்னை அரவணைத்து அருளப்பா....

ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!! ஓம் நமசிவாய!!!

 


Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி