மல்லிகை, ரோஜா விரும்பும் அவளின் பாதங்கள்

 என்னதான்டி உன் பிரச்சனை...?

நீ மனம் விட்டு பேச உன் மனசுக்கு பிடித்தவன் நான் இருக்கிறேன்....(மனசுக்கு பிடித்தவன்தானே)

நீயோ மனம் மயங்காமல் மனம் கலங்கி நிற்கிறாய்...

என் மனதையும் கலங்க வைக்கிறாய்... 

கருப்பு டி சர்ட் அணிந்து வந்த என் கட்டிக்கரும்பே...

நேற்றுதான் முதன்முறையாக உன் பாதம் பார்த்தேன்... 

ஆஹா அப்படி ஒரு நிசப்தம்!

மல்லிகை, ரோஜா பூக்கள் குடிகொள்ள விரும்பும் கோயில் அது!

பனி படர்ந்த ரோஜா இதழ்போல் உன் கால் நகங்களில் அங்கங்கே சிவப்பு நிற நெயில்பாலிஷ்...

காலின் பெருவிரலை அசைத்து எனையறியாமல் எனை சுற்றவைக்கிறாய்...

கண் சிமிட்டுகிறாய், காதல் பாஷை காட்டுகிறாய்...!

காதலிக்க மட்டும் மறுக்கிறாய்!

எனக்கு மட்டும்தானே தெரியும்... 

நான் உன்னை நெருங்கிக்கொண்டே இருக்கிறேன்... 

என் சிகப்பி இதயத்தில் சில்லென புது ரோஜா பூத்திருக்கு....

அதை சூடியவுடன் உன் மனமெனும் அரியணையில் ஏறிவிடுவேன்!

அதுவரை உன் வாட்டம் போக்க நான் என் செய்வேன்?

அறியேன் ! அறியேன் !! அறியேன் !!!



Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி