என்னுள் ஒளிக்கொடுத்த தேவதை !

"என் ப்ரியமான தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

நீ சிரித்தால் செர்ரி பழம் சிவக்கும்... செம்பருத்தி பூ பூக்கும்... சிவந்த வானம் கூட மேகம் திரண்டு மழை பொழியும்...

நீ முறைத்தால், பூக்கள் எல்லாம் வாடிவிடும் ...

சிறு குழந்தையாய் நீ அடிக்கடி கோபித்துக்கொள்கிறாய்.... 

குழந்தையாக இருந்தால் சாக்லெட் / ஐஸ்கிரீம் கொடுத்து சமாதானப்படுத்தி விடுவேன்... நீயோ! குழந்தை மனம் கொண்ட தேவதை! 

உனை எப்படி சமாதானப்படுத்த?

 அறியாமல் நான் செய்த சிறுதவறை மறந்துவிடு எனை மன்னித்து விடு!

 உன் புன்னகையை மட்டும் சிந்திக்கொண்டே இரு... அது போதும் எனக்கு...

என்னுள் ஒளிக்கொடுத்த தேவதையே ! 

இறைவன் திருவருளால்" என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்க! வாழ்கவே!!




Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி