வீணை இல்லா கலைவாணி

 மஞ்சள் உடையணிந்து வந்த மஹாராணியே...

மத்தாப்பு வெளிச்சமாக மதியே நின்முகம்!

கண்களின் புன்னகையை உன் கன்னத்தில் காண்கிறேன்...

கலையே! எனை கவிபாட தூண்டும் ரதியே!


5 அடி தூரத்தில் அமிர்தமாய் நீ இருந்து  

என்னுள் அமுதமழை பொழிகிறாய்...

தேவியே உன் வருகையால் தினம், தினம் திகைப்பாகிறது என் மனம் !

ஆடிப்பெருக்கு வெள்ளமாய் துள்ளிக்குதித்து ஓடுகிறது ...! 


கையில் வீணை இல்லா கலைவாணியே...

நானும் கவி படைக்கிறேன் உன் கடைக்கண் பார்வையினால்....!

கண்மணியே கொஞ்சம் கேளடி, என் பார்வையையும் கொஞ்சம் பாரடி!

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி