நீ புன்னகைத்து இரு!

கண்களை மூடிக்கொண்டு சத்தம் வெளியே வராமல் சிரிக்கிறேன்

வெட்கப்படுகிறேன், உனை காணாது தவிக்கிறேன்...

இதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று எனக்கும் தெரியும்.

தெரிந்தும் கூட மனம் உன்னையே நினைக்கிறது...


நீ விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்ட பின்பும், 

இன்ஸ்டாவில் எனை பிளாக் செய்த பின்பும்,

என் ஸ்டேட்டஸ்-ஐ ஹைடு செய்த பின்பும் கூட,

நான் ஏன் உனை நினைக்கிறேன்?

இந்த கேள்வியை பலமுறை என்னிடம் கேட்டிருக்கிறேன்...

பதில் மட்டும் இன்றுவரை கிடைக்கவே இல்லை.

உன்னை நினைக்கவே கூடாது என்று நான் நினைக்கும் போதெல்லாம் 

உன்னையே அதிகம் நினைக்கிறேன்...

கண்ணீர் வராமல் அழவைப்பது எப்படி என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்...

உன்னை பிடிப்பதற்கு இதுதான் காரணமா? இல்லை இதுவும் காரணமா ?

எது எப்படியோ?

அழுகை என்னோடு போகட்டும்.... நீ புன்னகைத்து இரு!

உன் புன்னகையில் என் காதல் வாழும்...!



Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி