உன் மவுனம் கூட அழகான மொழிதான்!

ஹேய் செல்லக்குட்டி, என் தங்கக்கட்டி...!

உன்னோடு கனவிலும், கற்பனையிலும் பேசிக்கொண்டே இருக்கிறேன்...

தூங்கப்போகும் முன் உன்முகம்! தூங்கி எழுந்தவுடன் உன்முகம்!

மேகம் பார்க்கையில் உன் முகம்! கடல் அலைகளில் உன்முகம்!

பயணிக்கும்போது உன்முகம்! பாடல் கேட்கையில் உன்முகம்!

பசித்தால் உன்முகம்! பரவசத்தின்போது உன்முகம்!

அழகான பெண்ணை சைட் அடிக்கும் போது உன்முகம்!

எனை நான் ரசிக்கும்போது உன்முகம்!

இப்படி எல்லாவற்றிலும் நீயே தெரிகிறாய்....!


என்னுள் இரண்டற கலந்துவிட்ட உன்னை 

எப்படி மறப்பேனடி! 

உன்னை நினைக்க மறக்கும் ஒரு நொடியில்,

அரை நொடி வேகத்தில் நினைவில் வருகிறாய்...

நீ என்னவள் என்றும், இறைவன் எனக்காக அனுப்பிய பெண் நீதான் என்றும் 

என் மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது...!

ஆனால், நீயோ பேசக்கூட மறுக்கிறாய்....


இதயம் உணர்ந்து கண்கள் பேசும்போது

வார்த்தைகளுக்கு பஞ்சமேது...!

உன் மவுனம் கூட அழகான மொழிதான்!


Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி