உயிர் துளிர்க்கும் வலி

 உன் கண்மலர் சிறிது வாடினாலும் என் மனப்பூ கருகி விடுகிறது.... 

அது காற்றில் கரைந்து சாம்பலானாலும் வேர் மட்டும் துளிர்விட்டுக்கொண்டே இருக்கிறது.

மீண்டும் உன் வருகையை எதிர்பார்த்து பூத்துக் குலுங்குகிறது. 

நீ சிரித்தால் நறுமணத்தை தென்றலுக்கு கொடுக்கிறது.

உன் முகம் வாடினால் மீண்டும் கருகி விடுகிறது.

கருகி, கருகி மீண்டும் உயிர்த்துளிர்க்கும் வலி நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை!


இந்நிலை என் எதிரிக்கு கூட வரக்கூடாது!

இதை மாற்ற முயற்சித்தும், மறக்க முயற்சித்தும் நான் தோற்றுக் கொண்டே இருக்கிறேன்...

இதையெல்லாம் எப்படி புரியவைப்பேன் உன்னிடம்? 

பிடிக்கவில்லை, என ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டாய்....!

முடிந்தும், முடிக்க முடியாமல் தவிக்கிறேன் நான்.... 

காரணம் கேட்டால்,

உன்னை அதிகமாக காதலித்து விட்டேன் என்கிறார்கள் ...!

இதிலிருந்து விடுபட ஒரு வழிதான் உள்ளது.

ஒன்று சிரித்துவிடு இல்லையேல் காதலித்து விடு 

உன்னிடம் மோட்சத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் உன் அன்பானவன்...




Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி