என் குழந்தை மனம் கொண்ட தேவதைக்கு....

பார்ப்பது என்னவோ கண்கள்தான்...

ஆனால், கண்ணீர் சிந்துவது என் இதயம் அல்லவா!

இரண்டு நாட்கள்தான் உன்னை பார்க்கவில்லை...

ஏதோ இருபது வருடங்கள் தாயை பிரிந்த சேயைப் போல உன்னை பார்த்தவுடன் என் இதயம் ஓடிப்போய் உன் மடி சாய்ந்துவிட்டு வந்து ஒட்டிக் கொள்கிறது...


பேண்டேஜ் சுற்றிய  இதய  ஸ்மைலியை நீ ஸ்டேட்டஸ் ஆக வைத்து சொல்லாமல் சொல்கிறாய்! எனை கொல்லாமல் கொல்கிறாய் என் இதயத்தை நொறுக்கியவன் நீதான் என்று... 

இன்னும் பேச ஆரம்பிக்காத குழந்தையால் தாயின் இதயத்தை எப்படி நொறுக்க முடியும்? தாய் அழுதால் பிள்ளைமனம் தாங்கிடுமா?

அக்குழந்தையின் தேவை எல்லாம் உன் அன்பும், அருள்விழி பார்வையும் மட்டுமே!

இதை எல்லாம் எப்படி புரிய வைப்பேன்? என் குழந்தை மனம் கொண்ட தேவதைக்கு....


Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி