நீ கொடுக்கும் தண்டனை நியாயமா...!

உன்னை பிடித்திருக்கிறது என்று நான் சொன்னதற்கு நீ கொடுக்கும் தண்டனை நியாயமா...!

வெள்ளை நிலத்தில் கருப்புநிறச் செம்பருத்தி மொட்டுக்களுடனும், பூக்களுடனும் பூத்துக்குலுங்குகிறது...

அதை சுற்றியவாறு செடிக்கொடிகள் .... 

அப்படி ஒரு டாப்,  அதை அணிந்த சிவப்பு நிற ரோஜாவாக நீ! 

பின்னல் ஜடையில் எனை பிண்ணி எடுக்கிறாய்....

ஹய்யோ...........!

இப்படி ஒரு அழகை கண்டால் பறக்காத மனம் கூட பறக்கத்தான் செய்யும்...

உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் என் மனம் என்ன செய்யும் ?  

என்னை பழிவாங்கும் உன் யுக்தி (stratergy) என்னோடு போகட்டும்....



தயவுசெய்து இன்னொரு பெண்ணுக்கு கற்றுக்கொடுத்து விடாதே...!  

பாவம்... தாங்கமாட்டான்  ஆண்மகன்!

கருணையே  இல்லாமல்  உன் விழிகள் எனை கொல்லும்  கருணை கொலைகள் ஆயிரம்!

ஆயினும்,நீ! கருப்புநிற ஆடையில் காட்சிதந்து எனை உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கிறாய்...!


Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி