Posts

Showing posts from 2023

நீ அனுமதி தந்தால் உன்னை ஆராதிக்கிறேன்...!

Image
 ஆயிரம் கவி சொல்லும், அருஞ்சுவையாய் அமிர்தம் பொங்கும்! அவள் கண்ணுண்ட களி மயக்கத்தில், 'அவள்' எனும் புத்தகத்தை  படிக்க ஆவலுற்றேன்.... ஒரு வாசகனாய் நூலகத்திறப்பிற்க்காக  வாயிலில் காத்துக்கிடக்கிறேன்... நீ அனுமதி தந்தால் உன்னை ஆராதிக்கிறேன்...!

எனை அறியாமல் மனம்‌ பறித்தாள்

Image
 ஆஹா...! இதயம் தித்திப்பாய் இனிக்கிறது தவிக்கிறேன், அலைகிறேன், எனை அறியாமல் புலம்புகிறேன்! கடற்கரை மணலில் அமர்ந்தவாறு கடல் அலையின் ஓசையோடு ஒரு மவுன உரையாடல்... என் இத்தனை வருட தேடலின் திருக்குறள் அவள்!  இறைவியாய் காட்சி தந்தாள், கலந்துரையாடினாள், கரைந்தே விட்டேன்.... அவளை பார்த்த பின்பு பள்ளிப்பருவ மாணவனாய் துளிர்க்கிறது மனது! என்‌ ஒட்டுமொத்த அன்பின் காதலையெல்லாம் அவள் காலடியில் கொட்டிவிட வேண்டும்... எப்படி சொல்வது அவளிடம்? சிந்திக்கிறேன்.... நான் சொல்கிறேன் என்றவாறு, என் உரையாடலை நானே அறியாமல் கேட்டுக் கொண்டிருந்த தென்றல் காற்று என் முகத்தை வருடியபடி நம்பிக்கை கொடுத்து செல்கிறது.... 

உன்னை நினைத்தாலே சுகம்!

Image
கவியே என்னை வெறுக்கும் போது நான் எப்படி கவி படைப்பேன்! உன்னை பார்த்தால் சுகம்! உன் பெயரைக் கேட்டால் சுகம்! உன்னை நினைத்தால் சுகம்! உனை பற்றி கவிதை எழுதும் போதெல்லாம் எழுத்துக்கள் துள்ளி குதித்து ஓடி வரும்...!  அவளுக்காக நீ தொடுக்கும் பாமாலையில் என்னையும் ஒரு மலராக இணைத்துக் கொள் என்று... ஆனால் இன்றோ, நீ சொன்ன ஒற்றை வார்த்தைக்காக  என் எழுத்துக்கள் எல்லாம் கண்ணீர் வடிக்கின்றன.... அன்பை அருமருந்தாக்கி அதிரசமாய் உனக்கு ஊட்ட அறவே பிடிக்கவில்லை என்கிறாய்! கடந்து போன வாழ்க்கையில் மீண்டும் கால் பதிக்க துடிக்கிறாய்... காதலன், கணவன் ஆவதெல்லாம் கடவுள் தந்த வரம்! நான் கடவுள் தந்த வரமாய் உன்னை நினைத்தேன்! நினைக்கிறேன்!  நினைத்துக் கொண்டே இருக்கிறேன்! நீயோ........ எப்படி சொல்வேன் என் எழுத்துக்களிடம் நீ என்னை வெறுக்கிறாய் என்று...! அவையெல்லாம் என்னை விட உன் மீதுதான் அதிக அன்பு காட்டுகின்றன...! உன்னைப் பற்றி எழுதும் போதெல்லாம் இதை வைத்துக் கொள்! இதை வைத்துக் கொள்! கண்ணே! மணியே! கற்கண்டே! கவியமுதே! கலைவாணியே! கனியே! காவியமே! தேனே! திரவியமே! என வார்த்தைகளை அள்ளி, அள்ளிக் கொடுக்கும்! என் சோகம் என்னோடு

உன் மவுனம் கூட அழகான மொழிதான்!

Image
ஹேய் செல்லக்குட்டி, என் தங்கக்கட்டி...! உன்னோடு கனவிலும், கற்பனையிலும் பேசிக்கொண்டே இருக்கிறேன்... தூங்கப்போகும் முன் உன்முகம்! தூங்கி எழுந்தவுடன் உன்முகம்! மேகம் பார்க்கையில் உன் முகம்! கடல் அலைகளில் உன்முகம்! பயணிக்கும்போது உன்முகம்! பாடல் கேட்கையில் உன்முகம்! பசித்தால் உன்முகம்! பரவசத்தின்போது உன்முகம்! அழகான பெண்ணை சைட் அடிக்கும் போது உன்முகம்! எனை நான் ரசிக்கும்போது உன்முகம்! இப்படி எல்லாவற்றிலும் நீயே தெரிகிறாய்....! என்னுள் இரண்டற கலந்துவிட்ட உன்னை  எப்படி மறப்பேனடி!  உன்னை நினைக்க மறக்கும் ஒரு நொடியில், அரை நொடி வேகத்தில் நினைவில் வருகிறாய்... நீ என்னவள் என்றும், இறைவன் எனக்காக அனுப்பிய பெண் நீதான் என்றும்  என் மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது...! ஆனால், நீயோ பேசக்கூட மறுக்கிறாய்.... இதயம் உணர்ந்து கண்கள் பேசும்போது வார்த்தைகளுக்கு பஞ்சமேது...! உன் மவுனம் கூட அழகான மொழிதான்!

நீ புன்னகைத்து இரு!

Image
கண்களை மூடிக்கொண்டு சத்தம் வெளியே வராமல் சிரிக்கிறேன் வெட்கப்படுகிறேன், உனை காணாது தவிக்கிறேன்... இதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று எனக்கும் தெரியும். தெரிந்தும் கூட மனம் உன்னையே நினைக்கிறது... நீ விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்ட பின்பும்,  இன்ஸ்டாவில் எனை பிளாக் செய்த பின்பும், என் ஸ்டேட்டஸ்-ஐ ஹைடு செய்த பின்பும் கூட, நான் ஏன் உனை நினைக்கிறேன்? இந்த கேள்வியை பலமுறை என்னிடம் கேட்டிருக்கிறேன்... பதில் மட்டும் இன்றுவரை கிடைக்கவே இல்லை. உன்னை நினைக்கவே கூடாது என்று நான் நினைக்கும் போதெல்லாம்  உன்னையே அதிகம் நினைக்கிறேன்... கண்ணீர் வராமல் அழவைப்பது எப்படி என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்... உன்னை பிடிப்பதற்கு இதுதான் காரணமா? இல்லை இதுவும் காரணமா ? எது எப்படியோ? அழுகை என்னோடு போகட்டும்.... நீ புன்னகைத்து இரு! உன் புன்னகையில் என் காதல் வாழும்...!

வீணை இல்லா கலைவாணி

Image
 மஞ்சள் உடையணிந்து வந்த மஹாராணியே... மத்தாப்பு வெளிச்சமாக மதியே நின்முகம்! கண்களின் புன்னகையை உன் கன்னத்தில் காண்கிறேன்... கலையே! எனை கவிபாட தூண்டும் ரதியே! 5 அடி தூரத்தில் அமிர்தமாய் நீ இருந்து   என்னுள் அமுதமழை பொழிகிறாய்... தேவியே உன் வருகையால் தினம், தினம் திகைப்பாகிறது என் மனம் ! ஆடிப்பெருக்கு வெள்ளமாய் துள்ளிக்குதித்து ஓடுகிறது ...!  கையில் வீணை இல்லா கலைவாணியே... நானும் கவி படைக்கிறேன் உன் கடைக்கண் பார்வையினால்....! கண்மணியே கொஞ்சம் கேளடி, என் பார்வையையும் கொஞ்சம் பாரடி!

மல்லிகை, ரோஜா விரும்பும் அவளின் பாதங்கள்

Image
 என்னதான்டி உன் பிரச்சனை...? நீ மனம் விட்டு பேச உன் மனசுக்கு பிடித்தவன் நான் இருக்கிறேன்....(மனசுக்கு பிடித்தவன்தானே) நீயோ மனம் மயங்காமல் மனம் கலங்கி நிற்கிறாய்... என் மனதையும் கலங்க வைக்கிறாய்...  கருப்பு டி சர்ட் அணிந்து வந்த என் கட்டிக்கரும்பே... நேற்றுதான் முதன்முறையாக உன் பாதம் பார்த்தேன்...  ஆஹா அப்படி ஒரு நிசப்தம்! மல்லிகை, ரோஜா பூக்கள் குடிகொள்ள விரும்பும் கோயில் அது! பனி படர்ந்த ரோஜா இதழ்போல் உன் கால் நகங்களில் அங்கங்கே சிவப்பு நிற நெயில்பாலிஷ்... காலின் பெருவிரலை அசைத்து எனையறியாமல் எனை சுற்றவைக்கிறாய்... கண் சிமிட்டுகிறாய், காதல் பாஷை காட்டுகிறாய்...! காதலிக்க மட்டும் மறுக்கிறாய்! எனக்கு மட்டும்தானே தெரியும்...  நான் உன்னை நெருங்கிக்கொண்டே இருக்கிறேன்...  என் சிகப்பி இதயத்தில் சில்லென புது ரோஜா பூத்திருக்கு.... அதை சூடியவுடன் உன் மனமெனும் அரியணையில் ஏறிவிடுவேன்! அதுவரை உன் வாட்டம் போக்க நான் என் செய்வேன்? அறியேன் ! அறியேன் !! அறியேன் !!!

என்னுள் ஒளிக்கொடுத்த தேவதை !

Image
"என் ப்ரியமான தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... நீ சிரித்தால் செர்ரி பழம் சிவக்கும்... செம்பருத்தி பூ பூக்கும்... சிவந்த வானம் கூட மேகம் திரண்டு மழை பொழியும்... நீ முறைத்தால், பூக்கள் எல்லாம் வாடிவிடும் ... சிறு குழந்தையாய் நீ அடிக்கடி கோபித்துக்கொள்கிறாய்....  குழந்தையாக இருந்தால் சாக்லெட் / ஐஸ்கிரீம் கொடுத்து சமாதானப்படுத்தி விடுவேன்... நீயோ! குழந்தை மனம் கொண்ட தேவதை!  உனை எப்படி சமாதானப்படுத்த?  அறியாமல் நான் செய்த சிறுதவறை மறந்துவிடு எனை மன்னித்து விடு!  உன் புன்னகையை மட்டும் சிந்திக்கொண்டே இரு... அது போதும் எனக்கு... என்னுள் ஒளிக்கொடுத்த தேவதையே !  இறைவன் திருவருளால்" என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்க! வாழ்கவே!!

கண்ணடிக்கும் கலை

Image
கண்ணை சிமிட்டாமல் கண்ணடிக்கும் கலையை அவளிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.... அரை நொடி பார்த்தால் போதும் ஆயுள் முழுவதும் சிறைகைதி ஆக்கி விடுவாள்... ஆம்! அன்று ஒரு நாள் அவளை அரை நொடிதான் பார்த்தேன்....  அன்று என்னை கண்களுக்குள் சிறை வைத்தவள் இன்று வரை விடுதலை செய்யவே இல்லை... கோவை கனியே... எனை கொத்தும் கிளியே... தினம் நூறுமுறை உனை நினைக்கிறேன்... குறைந்தது ஒரு முறையாவது எனை நினைப்பாயா...?!

நீ கொடுக்கும் தண்டனை நியாயமா...!

Image
உன்னை பிடித்திருக்கிறது என்று நான் சொன்னதற்கு நீ கொடுக்கும் தண்டனை நியாயமா...! வெள்ளை நிலத்தில் கருப்புநிறச் செம்பருத்தி மொட்டுக்களுடனும், பூக்களுடனும் பூத்துக்குலுங்குகிறது... அதை சுற்றியவாறு செடிக்கொடிகள் ....  அப்படி ஒரு டாப்,  அதை அணிந்த சிவப்பு நிற ரோஜாவாக நீ!  பின்னல் ஜடையில் எனை பிண்ணி எடுக்கிறாய்.... ஹய்யோ...........! இப்படி ஒரு அழகை கண்டால் பறக்காத மனம் கூட பறக்கத்தான் செய்யும்... உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் என் மனம் என்ன செய்யும் ?   என்னை பழிவாங்கும் உன் யுக்தி (stratergy) என்னோடு போகட்டும்.... தயவுசெய்து இன்னொரு பெண்ணுக்கு கற்றுக்கொடுத்து விடாதே...!   பாவம்... தாங்கமாட்டான்  ஆண்மகன்! கருணையே  இல்லாமல்  உன் விழிகள் எனை கொல்லும்  கருணை கொலைகள் ஆயிரம்! ஆயினும்,நீ! கருப்புநிற ஆடையில் காட்சிதந்து எனை உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கிறாய்...!

சித்ரவதை செய்கிறாய்...

Image
 ஏனடி! எனை இப்படி சித்ரவதை செய்கிறாய்...? எனை பற்றி சிந்திக்காத உன்னை சிந்திக்கவே கூடாது என நினைத்து உறங்கச் சென்றேன்... விடியற்காலைப் பொழுது விடிந்தும், விடியாமலும் புலர, அலாரம் அடித்ததுபோல் வந்துவிட்டாய் சிறு புன்னகையோடு! உன் பெயரை கிறுக்கியபடி நின்றிருந்தேன்... என்ன மாமா செய்கிறாய்? என்று நீ கேட்க,  உன் பெயரை எழுதிப்பார்த்தேன்... என்று நான் சொல்ல,  நக்கலாய் சிரித்தபடி நகர்கிறாய்...  நான் உன்னை துரத்துகிறேன்... அப்போது மெல்ல, மெல்ல வருகிறது சுயநினைவு! ப்ச்ச்...... கனவா! கனவுகள் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது... ஆனால், இந்த கனவு பலித்தால் நன்றாக இருக்கும் என்று என் மனம் சொல்லியது! அதற்கு உன் மனம் ஒப்பவேண்டுமே....!    தெவிட்டாத தேன் சிந்தும் எழுத்துக்களை வாரி வழங்கக்கூடிய என் பேனா, இன்று மூச்சுமுட்டி கிடக்கிறது உன் பெயரை எழுதியவாறு ....

என் மனம் மணக்கும் சந்தனமே!

Image
ஹய்யோ..! மீண்டும் கருப்பா!  ஜிலேபி கொண்டைக்காரி என் அன்பு சண்டைக்காரி  எனை கொல்லாமல் கொள்ளையடிக்கிறாள்! கண் விருந்தில்தான் பல காவியங்கள் பிறந்திருக்கின்றன என்பது உனை காணும்போதுதான் தெரிகிறது... உனை வர்ணிக்க வழக்கொழிந்த சொற்களை மீண்டும் தேடுகிறேன்... உன்னாலாவது சங்கத்தமிழ் மீண்டும் உயிர் பெறட்டுமே! அணிமலரே! என் அமராவதியே! கோமகளாய் என்னுள் குடிகொண்ட கோதையே!   என் மனம் மணக்கும் சந்தனமே!  உனை நான் மணக்கக்கூடாதா?

கொஞ்ஞ்ஞ்சி விட ஆசை!

Image
என்னதான் உனக்கு பிடிக்கலையே தவிர, எனக்கு புடிச்ச கலர உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! சென்ற வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை எனக்கு பிடித்த கருப்பு நிறத்தை அடையாளப்படுத்தும் ஆடைகளையே அணிந்து வந்தாய்! இருட்டின் வெளிச்சத்தை அதில் பயணிப்பவர்களால் மட்டுமே அறிய முடியும்... நீயும் அப்படித்தான், என் இருளை விலக்கி எனக்குள் ஒளி கொடுக்க வந்த தேவதை! அதிலும், வெள்ளிக்கிழமை நீ அணிந்து வந்த கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டும், டி-ஷர்ட்டும் அவ்ளோ அழகு! உனக்கு திருஷ்டி கழித்து, நெட்டி முறித்து, உன் கன்னத்தை செல்லமாய் கிள்ளி கொஞ்ஞ்ஞ்சி விட ஆசை! இதெல்லாம் நடக்கிற விஷயமா என்ன? ஆனாலும், உனை மனசுக்குள் கொஞ்ச, என் இதய தேவதை (வேறு யாரு நீதான்)  ஒருபோதும் மறுப்பு தெரிவித்ததே இல்லை.... யார் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லிவிட்டு, உன் வலது புற கன்னத்தை மேஜை மீது வைத்து லேசாக தலை சாய்த்து, என் முகம் பார்த்த அந்த வினாடிகளை என் உயிருள்ளவரை மறக்க இயலாது.... உன் வெள்ளை மனதுக்குள் கருப்பு நிற மீன்களாய் என் நினைவுகள்? உனக்கு பிடித்தோ, பிடிக்காமலோ உன் இதயத்தின் ஓர் ஓரத்தில் நானும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்... என் உ

என் குழந்தை மனம் கொண்ட தேவதைக்கு....

Image
பார்ப்பது என்னவோ கண்கள்தான்... ஆனால், கண்ணீர் சிந்துவது என் இதயம் அல்லவா! இரண்டு நாட்கள்தான் உன்னை பார்க்கவில்லை... ஏதோ இருபது வருடங்கள் தாயை பிரிந்த சேயைப் போல உன்னை பார்த்தவுடன் என் இதயம் ஓடிப்போய் உன் மடி சாய்ந்துவிட்டு வந்து ஒட்டிக் கொள்கிறது... பேண்டேஜ் சுற்றிய  இதய  ஸ்மைலியை நீ ஸ்டேட்டஸ் ஆக வைத்து சொல்லாமல் சொல்கிறாய்! எனை கொல்லாமல் கொல்கிறாய் என் இதயத்தை நொறுக்கியவன் நீதான் என்று...  இன்னும் பேச ஆரம்பிக்காத குழந்தையால் தாயின் இதயத்தை எப்படி நொறுக்க முடியும்? தாய் அழுதால் பிள்ளைமனம் தாங்கிடுமா? அக்குழந்தையின் தேவை எல்லாம் உன் அன்பும், அருள்விழி பார்வையும் மட்டுமே! இதை எல்லாம் எப்படி புரிய வைப்பேன்? என் குழந்தை மனம் கொண்ட தேவதைக்கு....

அவளை கடக்க முடியாமல் நான்

Image
 அவளை பார்த்தபின்புதான் அன்பெனும் ஊற்று பெருக்கெடுத்தது.  திருமணம் செய்தால் அவளை போன்ற ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும், அப்பெண்ணோடு பயணிக்க வேண்டும், அன்புக் கதை பேசி அளாவ வேண்டும். அவள் காணாத மற்றுமொரு உலகை காண்பிக்க வேண்டும் இப்படியெல்லாம் என்னென்னவோ எண்ணங்கள் என் மனதில் உருப்பெற்று உலாவிக் கொண்டிருக்கின்றன.   அவளுக்கு மட்டும் மறுமணம் நடந்திருந்தால் இன்று மகாராணியாக வாழ்ந்திருப்பாள். சாதி, சமய சடங்குளில் சிக்குண்ட அவளுக்கு ஏது மறுமணம் ? தனிமையிலேயே வாழ்ந்துவிட்டால் தன் 80 வயது வரை.... இன்றோ, தான் பெற்று எடுத்த மகனால் தாக்கப்பட்டு நடக்க முடியாமல் கிடக்கிறாள். அவள் தாக்கப்பட்ட செய்தி அறிந்து துடிதுடித்து போனேன். வேறு என்னால் என்ன செய்ய முடியும்? அவளை பார்க்க மனம் இல்லாமல் கடந்து விட வேண்டும் என்று பார்க்காதது போல் கடக்க முற்பட்டேன். அவளோ கண்டுபிடித்து விட்டாள். என் பெயரை கூவி அழைக்கும்போது அவளை பார்க்காமல் எப்படி கடந்து போக முடியும்? கூரை கொட்டகையில் மண்ணோடு மண்ணாக சாய்ந்து கிடக்கிறாள்..... சிறுநீர் நாற்றத்துடன் உடலில் 5/6 இடங்களில் சிராய்ப்புகள்....  பேசும்போதே கண்களில் கண்ணீ

உயிர் துளிர்க்கும் வலி

Image
 உன் கண்மலர் சிறிது வாடினாலும் என் மனப்பூ கருகி விடுகிறது....  அது காற்றில் கரைந்து சாம்பலானாலும் வேர் மட்டும் துளிர்விட்டுக்கொண்டே இருக்கிறது. மீண்டும் உன் வருகையை எதிர்பார்த்து பூத்துக் குலுங்குகிறது.  நீ சிரித்தால் நறுமணத்தை தென்றலுக்கு கொடுக்கிறது. உன் முகம் வாடினால் மீண்டும் கருகி விடுகிறது. கருகி, கருகி மீண்டும் உயிர்த்துளிர்க்கும் வலி நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை! இந்நிலை என் எதிரிக்கு கூட வரக்கூடாது! இதை மாற்ற முயற்சித்தும், மறக்க முயற்சித்தும் நான் தோற்றுக் கொண்டே இருக்கிறேன்... இதையெல்லாம் எப்படி புரியவைப்பேன் உன்னிடம்?  பிடிக்கவில்லை, என ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டாய்....! முடிந்தும், முடிக்க முடியாமல் தவிக்கிறேன் நான்....  காரணம் கேட்டால், உன்னை அதிகமாக காதலித்து விட்டேன் என்கிறார்கள் ...! இதிலிருந்து விடுபட ஒரு வழிதான் உள்ளது. ஒன்று சிரித்துவிடு இல்லையேல் காதலித்து விடு  உன்னிடம் மோட்சத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் உன் அன்பானவன்...

முத்துமுத்தான முகப்பருக்கள்

Image
 நாய்க்குட்டியை கொஞ்சும் என் ப்ரியமான நாயகியே... இந்த நாயகனை சுயம்வரம் நடத்தி சூடிக்கொள்ளக் கூடாதா?  உன் நிமிர் நடையில் என் திமில்களும் திமிருகின்றன... ஒரு புருவம் உயர்த்தி நீ பார்க்கும் ஓரப் பார்வையில் வெட்டி வீழ்த்துகிறாய் எனை வாழைமரமாய்! சைட் அடித்தால் முகப்பரு வருமாம்!  உன் கன்னத்தில் முத்துமுத்தான ஆறு முகப்பருக்கள்....  எப்படி வந்தது? நானும் யோசிக்கிறேன்.....  ஒருவேளை உன்னை அறியாமல் நீ என்னை சைட் அடிக்கிறாயோ!

உன் மேல குத்தம் இல்ல... நீ ஒன்னும் நானும் இல்ல!

Image
அம்பிகாவிற்கு 30 வயதிற்கு குறையாமல் இருக்கும். குண்டான உடல். ஒளி பொருந்திய கண்கள். தெய்வீகமான முகம். அவளின் கண்களை பார்த்துக்கொண்டு இருந்தால் போதும் பசியே எடுக்காது.  அப்படி ஒரு முகம். ஆனாலும், அவளின் கண்களிள்  ஏதோ ஒரு பரிதவிப்பு, வலி. அதாவது, நீண்ட நாள் பழகிய நண்பனின் துரோகம், உண்மையான அன்பை கொடுத்து ஏமாந்த வலி, நம்பிக்கை துரோகம், இது போன்று எளிதில் கடந்து வர முடியாத ஏதோ ஒரு வலியாகத்தான் இருக்க வேண்டும். அதை ராஜாராமன்  நன்கு அறிந்து கொண்டான். அவளை பார்த்த முதல் நாளே அவனுக்கு பிடித்துவிட்டது. தான் இதுநாள்வரை  எதிர்பார்த்துக் காத்திருந்த பெண் இவள்தானோ என்று தோன்றியது.  ஆனாலும், மத்திம வயதை நெருங்கி கொண்டிருக்கும் அவளுக்கு இதுநாள் வரை காதல் வராமலா இருந்திருக்கும் . கண்டிப்பாக காதல் வந்திருக்கும். இதுபோன்ற ஒரு பேரழகியை  குறைந்தது ஒரு பத்துபேராவது  துரத்தி , துரத்தி காதலித்து இருக்கக் கூடும். ஏன் அவளுக்கு திருமணமாகி குழந்தை இருந்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறே அவனின் மனதில் எண்ணங்கள் தோன்றியது.  ஒரு பெண் மீது காதல் வருவது தவறில்லை. இருப்பினும் அவளோடு வாழ்க்கை முழுவதும் பயண

ராட்சசி

Image
 அக அழகில்லாத அவளை எப்படி மறப்பேன்... உணர்வுகளோடு விளையாடி உயிர் வலியை உதாசீனப்படுத்துகிறாள்... வண்ணத்துப்பூச்சியாய் என் இதயத்தை வட்டமிட்டவள்... அவளின் வாட்டம் கண்டு சிறகுகளை வருடச் சென்றேன்... சிந்திவிட்டால் திராவகத்தை, பற்றி எரிகிறது என் இதயம்...  கண்ணீரால் அனைத்தும் இன்னும் அணைந்த பாடில்லை... புவியீர்ப்பு விசையாய் அவளின் இரு விழி ஈர்ப்பு விசையில் என்னை வீழ்த்தியவள்... இனி தனியாக பறந்தால் தானே ஈர்ப்புவிசை வேலை செய்யும்? நான் மறவேன், பறந்தால் வானூர்தி துணையுடன் தான் இனி பயணம்.... 

சாக்லெட்

Image
 சாக்லெட் பார்த்தாலே அவள் முகம்தான் ஞாபகத்திற்கு வருகிறது....   பேசாமலேயே இனிக்கிறது மனம்..... அவள் மட்டும் பேசினால் எத்தனை தித்திப்போ....   இது என்ன புது வலி? ஓ.... இதுதான் காதலா!  அப்படியெனில் அனுதினமும் காதலித்துக்கொண்டே இருக்க வேண்டும்... உன் முகம் காண தினம் ஏங்குகிறேன்....  ஒரு பார்வை வீசிவிட்டு போயேன்.... என் ஜீவனாவது உயிர் வாழட்டும்....  

அவளுக்கொரு முத்துச்சரம்

Image
 மூன்றெழுத்தில் அவளுக்கொரு முத்துச்சரம் படைக்க எண்ணினேன் முத்தமிழும் தித்திக்குது என்னிடம்... சொக்கனுக்கு வாய்த்த சுந்தரியாய் , சொக்க வைக்கிறாள், இந்த சுந்தரனை! பண்பின் முன்னிலையாய்... பத்தின் இடைநிலையாய்.... அம்மாவின் கடைநிலையாய்.... அவளுக்கோர் அர்ச்சனை! அன்பு என்றால் அவள் தான்! அறம் என்றால் அவள் தான்! இதழென்றால் அவள் தான்! இம்சையின் அகராதி அவள் தான்! அரிதாக புன்முறுவல் பொழிவாள்! எனை அவள் பாதி ஆக்கிவிடுவாள்... மௌனத்தின் மகாராணியவள்... பேசினால் மல்லிகையின் மணம் வீசும்... மரிக்கொழுந்தும் மயங்கிவிடும்! அவள் கண்ணிமைக்கும் நொடிப் பொழுதில் என் எழுத்துக்களின் மாத்திரையும் தடுமாறும்.... ஈரெழுத்து விலங்குகளை எல்லாம் உச்சிக் கொட்டி ரசிக்கின்றாள்! இந்த ஆறெழுத்து விலங்கை மட்டும் அவமதிப்பதேனோ? ஒரு வினாடியில் அவளின் இரு விழி அசைவு போதும் என் ஆயுள் இன்னும் நீளும்!

அருட்பா!

Image
என்னுள் இருந்து என்னுள் கலந்து என்னுள் மலர்ந்து என்னுள் இனித்தாய்! எனை அறிய வைத்தாய்! ஊன் குறைய வைத்தாய்!  உள்ளம் தெளிய வைத்தாய்!  காதலிக்க கற்றுக் கொடுத்தாய்!   அழுகையின் சுகம் தந்தாய்!  ஆறுதலாய் நீயே வந்தாய்!  பொறுமையை சொல்லித் தந்தாய்!  புது உலகம் நீ படை என்றாய்!  வெறுமையை விலக்கி வைத்தாய்!  ஊக்கம் தருவேன் ஓடென்றாய்! ஓடுகிறேன் உன் தயவால்! வெற்றியாக நீயே வருவாய் ! அப்பா.. அப்பா...அம்மையப்பா... நீ என் அன்னையப்பா!  உன்னையல்லால் வேறு தெய்வம் இல்லையப்பா!   தித்திப்பா! இனிப்பா! கரும்பா!  சொற்களில் இல்லை உன்னை வர்ணிக்கும் 'பா' .. அப்பா... இது நான் எழுதும் அருட்பா! என்னை அரவணைத்து அருளப்பா.... ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!! ஓம் நமசிவாய!!!  

பேரழகு

Image
 அவள் உச்சரித்த பின்பு தான் தெரிந்தது என் பெயர் அவ்வளவு அழகென்று.... 4-5 முறை பார்த்திருப்பேன்...  அவள் திரும்பி கூட பார்த்தில்லை...  அரக்கி, கிறிக்கி, சிரிக்கி என்று பொறுக்கியாய் வசைபாட தோன்றும்! ஆயினும், கள்ள, கபடமில்லா சிரிப்பும், குழந்தைத்தனமான பேச்சும் எனக்கு எக்களிப்பை கொடுக்கும்...  அவளை எப்படி வசைப்பாடுவேன் ?  இதோ உச்சரித்து விட்டாள் என் பெயரை உருக்கி! எனக்கு மீண்டும் எக்களிப்பு! மச்சக்காரி மனதில் என்ன ரகசியமோ!  

உனக்கு ஒரு முத்தம்

Image
 நான் அழும்போதெல்லாம் தலைசாய மடி கொடுத்தவன்... நான் பாடும் போதெல்லாம் என் ஒலியை எதிரொலித்தவன்! என் சிரிப்பை சிந்திக்க வைத்தவன்! என் அந்தரங்கத்தை முழுதும் அறிந்தவன்! என் ஆறுதலின் ஆலமரம் அவன்.... எந்த எதிர்பார்ப்பும் இன்றி இன்றும் என்றும் என்னோடு பயணிப்பவன்.... கண்ணாடியின் காதலன் அவன்,  "குளியலறை கதவு".

மந்தாகினி

Image
 பேருந்தில் பக்கத்து சீட்டு. அன்று அவள் அரிதாரம் பூசவில்லை ஆயினும் அழகாய் ஜொலித்தாள்..! ஒன்றரை அடி நீளத்தில் போனி ஹேர் ஸ்டைல்.  தலைக்கோத ஏதுவாக இடதுபுற நெற்றியில் வழிந்தோடும் அருவியாய், சிறிய கொத்தான மயிர் இழைகள்... தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் சிறிய வட்ட வடிவிலான கருப்பு நிற பொட்டு...  அவளை வர்ணிக்க வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தேன்...  பொத்தென்று ஒரு சத்தம்! பதறி போய் திரும்பினேன், அவள் சிதறிப்போய் கையில் எடுத்தாள்..., மஞ்சள் வண்ணத்தில் சீப்பு.  ஹேண்ட் பேக்கில் அவளின் கைகள் ஏதோ துலாவிக்கொண்டிருந்தன.. மிச்சராகவோ, காரா பூந்தியாகவோ இருக்க வேண்டும். அதை நமக்கும் தருவாளா? என மனம் ஏங்கியது. நினைத்து முடிப்பதற்குள் ஸ்கார்ப் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டாள்.  இறுதியாக, மயில் இறகின் டாட்டூ குத்திய அந்த கைகளில் ப்ளூடூத் ஹெட்செட்.  சேலை மட்டும் கட்டி இருந்தால் மப்பும் மந்தாரமாய் இருந்திருப்பாள்...  சுடிதார் அணிந்து வந்ததால் தற்போது எட்டிப் பார்க்கிறது தொப்பை....!!!  

நீ வருவாயா....!

Image
 அழகை அணு அணுவாய் ரசித்து ருசிக்கும் ஆத்மார்த்த தம்பதிகளுக்கே தேவதைகள் பிறக்கின்றனர்... அத்தேவதைகள் சினுங்கினால் சில்மிஷம் சீண்டினால் பரவசம்... கண்கொத்தி பாம்பாய் கண்ணால் கொத்தும் போது அடி மனதில் ஆலகால விஷம் பரவுகிறது... அதை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் நீலகண்டனாய் தவிக்கிறேன் நான்... என் விஷத்தை முறியடிக்க சிவகாமியே நீ வருவாயா....!

எனை மன்னிப்பாயா?

Image
 நானும் ஒரு  சல்லி பயலானேன்.... அன்பின் தேவை ஊற்றெடுக்கும் போது நான் மட்டும் என் செய்வேன்? பணம்! பணம்!! பணம்!!! என்று கொல்லி வாய் பிசாசாய் அலையும் இச்சமூகத்தில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன? இயலாமையின் உச்சம்... என் ஆற்றாமையின் அநீதி...  இப்படித்தான் வாழ வேண்டும் என போதித்த சமூகம்! நான் வளர்ந்த பிறகு, இப்படி எல்லாம் இங்கே வாழ முடியாது என போதிக்கும் போது நான் என்செய்வேன்?  என் ஆதியும் அந்தமும் நீ தான்! தீப்பிழம்பாய் கக்கி விட்டேன் வார்த்தைகளை.... ஆயிரம் மருந்திட்டாலும்  ஆறாத வடுதான்... நான் அன்போடு பேச அழைக்கும் போதெல்லாம் அணுகுண்டின் கதிர்வீச்சாய் பதறுகிறாய்... உன் பதற்றம் என் மனதை கசக்கிப் பிழிகிறது... கண்களில் கண்ணீர் வர மறுக்கிறது... என் பாவக் கணக்கு கூடிக் கொண்டே போகிறது.... அப்பா எனை மன்னிப்பாயா?

முட்டைக் கன்னி

Image
முட்டைக் கண்ணால் முத்தமிடும் முக்கனியே... உன்னை முத்தமிழால் முத்தமிடுகிறேன்...! இது மெய் தீண்டா உயிர் குழந்தையின் முத்தம்..‌.  காற்றசைவில் கவி பாடும் உன் காதோர லோலாக்கிற்கு என் மூச்சுக்காற்றில் முத்தம் இடுகிறேன்... உன் பார்வையில் மின்னல் வெட்ட படர்கிறது பசலை....

இதழ்கள்

Image
 பன்னீரில் துவைத்த ரோஜா இதழ்கள் நிரப்பப்பட்ட தீர்த்த குளத்தில் திக்குமுக்காடுகிறேன்....  வர்ணிக்க முடியாத அழகான டைமண்ட் கண்ணாடி படிக்கட்டுகள் அவளின் உதடுகள்....