கண்ணீர் தொட்டி இல்லை..!

இரண்டு உருண்டை விழுங்கவில்லை,

இடிமின்னலுடன் வந்துவிட்டது 

வானிலை அறிக்கை!

இன்னும் 20 வினாடிகளில் 

நினைவு எனும் மின்னல் வெட்டி,

இதயத்தில் இடி இடித்து

கண்ணீர் மழை பெய்யும்...

  


அது கன்னம், உதட்டின் வழியாக சென்று உள்ளங்கையை முத்தமிடும்.

இறுதியாக உடலில் சென்று சங்கமிக்கும்!

வானிலை சொல்லி முடிக்கும் முன்பாகவே மழை வந்துவிட்டது!

சேமிக்க கண்ணீர் தொட்டி இல்லை,

மழையை அருந்தும் சக்கரவாகம் பறவைப்போல

கண்ணீரில் கரைந்து உயிர்வாழ்கிறேன்!

இது கானம் இசைக்கேட்கும் கண்ணீர் மழை!

  


அங்கேயும் மழை வரலாம்..!  கைகுட்டை, கண்ணாடியை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்..!

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி