தனிமை கொஞ்சம் இனிப்பு! கொஞ்சம் உப்பு!

 உயிர் தாகம் எடுத்திருக்கும்,

உள்ளூர துடித்திருக்கும்,

உடல் விட்ட ஆவிபோல 

ஒப்பாரி தான் வைக்கும் தனிமை!


நினைவுகள் தொடர்ந்து வர,

நிம்மதி இழந்துவிட

நீரில்லா மீன்போல,

துடியாய் துடித்திருக்கும் தனிமை!



கனவுகள் தொடர்ந்து வர,

நினைவுகள் நீந்தி வர,

காலம் அது கைக்கொட்டி சிரிக்கும் தனிமை!


காவியம் பல நினைக்க வைக்கும்,

கலை நயம் ரசிக்க வைக்கும்.

கரும்பு சுவை என இனித்திருக்கும் தனிமை!


தன்னைத்தானே செதுக்கி வைக்கும்,

தன்னைத்தானே சிரிக்க வைக்கும்,

தரணியில் உனக்கு யாரும் இல்லையென 

தகைசார் கொள்ளும் தனிமை!


வேட்கை தாகம் எடுத்திருக்கும்,

வீரம் அது செறிந்திருக்கும்,

இயற்கையோடு காதலிக்கும் 

இனிமையான தனிமை!



வலிக்கும் மருந்திடும்,

ஒரு வழியாக மனம் திருந்திடும்,

தனி அழுகை சுகமாகும்,

திட்டித்தீர்த்தாலும் திகைப்பான தனிமை!


தனிமை கொஞ்சம் இனிப்பு! கொஞ்சம் உப்பு!

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி